புதுதில்லி, அக். 9 - மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை, இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) திங்கட்கிழமை வெளியிட்டது. இதன்படி 40 இடங்களைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7 அன்று ஒரே கட்டமாகவும், 90 இடங்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வும், 230 இடங்களைக் கொண்ட மத்தி யப் பிரதேசத்தில் நவம்பர் 17-ஆம் தேதியும், 200 இடங்களைக் கொண்ட ராஜஸ்தானில் நவம்பர் 23-ஆம் தேதியும், 119 இடங்களைக் கொண்ட தெலுங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் அறி விக்கப்பட்டு உள்ளது. ஐந்து மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட உள்ளன. மிசோரம் (டிசம்பர் 17, 2023), சத்தீஸ்கர் (ஜனவரி 3, 2024), மத்தியப் பிரதேசம் (ஜனவரி 6, 2024), ராஜஸ் தான் (ஜனவரி 14, 2024), தெலுங்கானா (ஜனவரி 16, 2024) ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதி திங்களன்று அறிவிக்கப்படும் என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
அதன்படியே, மேற்கண்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பி. ராஜீவ் குமார் திங்களன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், மிசோர மில் 8.52 லட்சம் வாக்காளர்களும், சத்தீ ஸ்கரில் 2.03 கோடி வாக்காளர்களும், மத்தியப் பிரதேசத்தில் 5.6 கோடி வாக்காளர்களும், ராஜஸ்தானில் 5.25 கோடி வாக்காளர்களும், தெலுங் கானாவில் 3.17 கோடி வாக்காளர் களும் வாக்களிக்கத் தகுதி பெற்று உள்ள தாக தெரிவித்தார். மேலும், இந்த 5 மாநிலங்களிலும் 8.2 கோடி ஆண்கள், 8.7 கோடி பெண்கள் என ஒட்டுமொத்தமாக சுமார் 16 கோடி பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள நிலையில், இவர்களில் 60 லட்சம் பேர், 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட முதல் முறை வாக்காளர்கள் என்பதைச் சுட்டிக்காட்டினர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறைகள் உடனடியாக நடை முறைக்கு வந்துள்ளன. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங் களில், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தா னில் காங்கிரஸ் கட்சியும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சியும், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியும், மத்தியப் பிரதேசத்தில் பாஜக-வும் ஆட்சியில் உள்ளன.