states

img

‘அரசாங்கத்தை விமர்சித்தால் யாரும் தப்ப முடியாது’

‘நியூஸ் கிளிக்’ செய்தி இணையதளத்தின் மீதான ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கையானது, அரசாங்கத்தை யாராவது விமர்சித்தால் அவர்கள் தப்ப முடியாது என்ற மோசமான செய்தியை ஊடகங்களுக்கு மறைமுகமாக தெரிவிப்பதாகவும், சுதந்திரமான ஊடகங்களை ரெய்டு மூலம் அச்சுறுத்தி மிரட்டிப் பணியவைக்கும் முயற்சியாக தெரிகிறது என்றும் ‘மும்பை பிரஸ் கிளப்’-பின் தலைவரும், ‘இந்திய பிரஸ் கவுன்சிலின்’ உறுப்பினருமான குர்பீர் சிங் விமர்சித்துள்ளார்.  இதுதொடர்பாக ‘Rediff.com’ இணைய தளத்திற்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:

*    ஒரு பத்திரிகையாளராகவும், ஒரு வாசக ராகவும், நியூஸ் கிளிக்கில் இருந்து என்ன சீனப் பிரச்சாரத்தை நீங்கள் பார்த்திருக் கிறீர்கள்?

எனக்கு இது பீமா கோரேகான் வழக்கு போன்ற தாக தெரிகிறது. எதிர்ப்பாளர்களை - ஊடகங்களை - ஒரு மூலையில் தள்ளி, அரசுக்கு எதிரான எதிர்ப்புக்களை வெளியில் வரவிடாமல் அமுக்குவதற்கு எந்த எல்லை வரை செல்ல முடி யும் என்பதை ஆழம் பார்க்க அரசுமுயற்சிக்கிறது.  இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால், கைது செய்யப்பட்ட இரண்டு நிர்வாக நபர்களைத் தவிர (பிரபீர் புர்காயஸ்தா மற்றும்  அமித் சக்ரவர்த்தி), விசாரணைக்கு எடுக்கப்பட்ட வர்களில் பெரும்பாலானவர்கள் கட்டுரை யாளர்கள். இது அபத்தமானது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வர்களில் மூத்த பத்திரிகையாளர் ஊர்மிளேஷ் ஒரு நடுநிலைவாதி. ராஜ்யசபா டி.வி.யின் ஆசி ரியராக இருந்தார். எனவே, இந்த நடவடிக்கை நிச்சயமாக மிகவும் மோசமான செய்தியை மிக வலுவான முறையில் அனுப்புகிறது. அது என்னவென்றால், அரசாங்கத்தை விமர்சித்தால் யாரும் தப்ப முடியாது. யாருக்கும் விதி விலக்கு இல்லை என்பதுதான். மேலும், ‘தேச  விரோதிகள்’, ‘பயங்கரவாதிகள்’ என்ற வரை யறையை (ஊடகங்கள், பத்திரிகையாளர்களை குறிவைப்பதன் மூலம்) விரிவுபடுத்தும் முயற்சி யாக இது இருக்கிறது. இதில் சோகமான விஷ யம் என்னவென்றால், கைது செய்யப்பட்ட வர்களை நீதிமன்றங்கள் பின்னாளில் (குற்ற மற்றவர்கள் என்று) விடுவிக்கும்போது, அவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் இருந்திருப்பார்கள்.

*    இன்றைய ரெய்டுகள் பத்திரிகையாளர்களை பயமுறுத்துவதில் வெற்றி பெறுமா?

ஆம், நிச்சயமாக. இன்றைய ஊடக சூழ்நிலையை நீங்கள் பகுப்பாய்வு செய்தால், ஒரு சில குரல்களைத் தவிர, முக்கிய செய்திச் சேனல்கள் அரசு எதிர்ப்பில் முற்றிலும் இல்லா மல் போய்விட்டன. இருப்பவையும் அவர்களது எஜமானரின் குரலையே பிரதிபலிக்கின்றன. எஞ்சியிருப்பவை அச்சு மற்றும் டிஜிட்டல் மீடியா ஆகும். எனவேதான், சுயேட்சையான (நியூஸ் கிளிக்) போன்ற இணையதள செய்தி நிறுவனங்கள் குறிவைக்கப்படுகின்றன. செய்தி இதழியல் தொழிலில் தங்களைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த சோதனைகளால் நிச்சயமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாவார்கள்.

* இப்போது பத்திரிகையாளர்களை பாதுகாக்க என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

பத்திரிகையாளர்கள் ஏற்கெனவே போராட்டம் நடத்தி வருகின்றனர்.   எனினும், சுற்றிலும் ஒரு அவநம்பிக்கையே நிலவுகிறது. ஊடகவியலாளர்கள் தாங்கள் ஒரு  சுதந்திர நிறுவனமாக தொடர்வதற்கு- ஏற்கெனவே தோற்றுப்போன போரில் போராடுவ தாக உணர்கிறார்கள். முக்கியமான சேனல்கள் கசக்கிப் பிழியப்பட்டுள்ளன. இதனால் ஒன்றிய அரசை எதிர்த்துப் பேசிவந்த செய்தித்தாள்கள் தற்போது ‘நடுநிலைவாத’ நிலையை எடுக்கத் தொடங்கியுள்ளன. பழைய பாணி இதழியல் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. இளைஞர்கள் இதழியல் தொழிலில் சேரவில்லை. முடிந்த மட்டுக்கும் அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி, மக்கள் தொடர்புத்துறை அல்லது தொலைக்காட்சி தயாரிப்புக்கு செல்கிறார்கள். பத்திரிகைத் தொழிலை ஒரு சாத்தியமான தொழிலாகக் கருத  முடியாமல் கைவிடுகிறார்கள். விமர்சன ரீதியான பத்திரிகை, மரபார்ந்த இதழியல் அழிந்து கொண்டிருக்கிறது. இது அரசாங்கத்தால் மட்டுமல்ல, கொரோனா காலத்தில் பத்திரிகையாளர்களை பணிநீக்கம் செய்த கார்ப்பரேட் ஊடகங்களாலும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய பிரஸ் கவுன்சில் ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கி யுள்ளது. அதில், கொரோனா தொற்றுப் பாதிப்பின் முதல் 6 மாதங்களில், 2400 பத்திரிகையாளர்கள் வேலை இழந்ததை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இவற்றில் 75 சதவிகிதம் அச்சு ஊடகங்களில் நடந்துள்ளன. ஊடக நிறுவனங்கள் ஏற்கெனவே பணியாற்றியவர்களை வெளியேற்றி விட்டு, பின்னர் குறைந்த ஊதியத்தில் புதியவர்களை வேலைக்கு அமர்த்தின. எனவே, மோசமான கார்ப்பரேட் நிர்வாகமும் மரபார்ந்த இதழியல் தொழில் அழிவுக்குக் காரணமாக உள்ளது.

*    ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புலனாய்வு மற்றும் மனித உரிமை செய்திகளை வெளிக்கொண்டு வந்ததற்காக, மும்பை பிரஸ் கிளப்  மதிப்புமிக்க சிவப்பு மை விருதுகளை வழங்குகிறது. இது விமர் சன இதழியல் அழிந்து கொண்டிருக் கிறது என்ற உங்கள் கூற்றுக்கு முர ணாக இல்லையா?

அந்த சிறந்த செய்திகள் பெரும்பாலானவை பிரதான ஊடகங்களில் இடம்பெறவில்லை. பெரும்பாலானவை சிறிய அல்லது டிஜிட்டல் மீடியாவில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. வெகு சில செய்திகளே பெரிய ஊடக நிறுவனங்களில் வருகின்றன.

 - தமிழில் தொகுப்பு : அ.மாரிமுத்து