கோழிக்கோடு முஸ்லீம்லீக்கையும் ஜமாத்தே இஸ்லாமி யையும் ஒரே நிலையில் வைத்து பார்க்கக் கூடாது. ஜமாத்தே இஸ்லாமியின் இலக்கு இஸ்லாமிய அரசு. ஆனால் முஸ்லிம் லீக் ஒரு சீர்திருத்த இயக்கம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப் பினர் பி.ஜெயராஜன் எழுதிய ‘கேரளா: முஸ்லீம் ராஷ்ட்ரி யம் (அரசியல்) ராஷ்ட்ரிய இஸ்லாம்’ என்கிற புத்தகத்தை முதல்வர் வெளியிட்டார். அப் போது அவர் மேலும் பேசுகை யில், “சங்பரிவாரைப்போல் ஜமாத் இ இஸ்லாமியும் வகுப்பு வாத நோக்கம் கொண்டது. கம்யூனிச எதிர்ப்புக்காக முஸ் லிம் லீக் இத்தகைய வகுப்பு வாதக் கட்சிகளுடன் கை கோர்த்து வருகிறது. நாட்டிற்கு வெளியே உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் ஜமாத்-இ-இஸ்லாமிக்கு தொடர்பு உள்ளது. இந்தியாவுக்கு வெளியே லீக்குக்கு கூட்டணி கிடையாது. ஜமாஅத்தே இஸ்லாமி விரும்புவது இஸ்லா மிய சர்வ தேசியவாதம். லீக் கிற்கு அப்படி இல்லை என்றார். மேலும், “மலபார் கலகம் நிலப்பிரபுத்துவத்துக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டம். இந்த படைப்பு குடி யுரிமை பிரச்சனையையும் விவாதிக்கிறது. ஜெயராஜனின் புத்தகம் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனை களைச் சுட்டிக் காட்டுகிறது. கல்வித் துறையின் அவல நிலை குறித்தும் விவாதிக்கப் படுகிறது. அது எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதையும் இந்நூல் கூறுகிறது. தேசிய முஸ்லிம்கள், முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட்கள் பற்றி புத்தகத்தில் விவாதிக்கப் பட்டுள்ளது. லீக் மீதான காங்கி ரஸின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றங்களையும் புத்தகம் குறிப்பிடுகிறது என் றும் பினராயி விஜயன் கூறினார். சிபிஎம் மூத்த தலைவர் பாலோலி முஹம்மது குட்டிக்கு வழங்கி புத்தகத்தை முதல்வர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இ.பி.ஜெய ராஜன், பொதுப்பணித்துறை அமைச்சர் பி.ஏ.முஹம்மது ரியாஸ், கே.டி.ஜலீல் எம்.எல்.ஏ., டி.கே.ஹம்சா உள் ளிட்டோர் பங்கேற்றனர்.