புதுதில்லி ஜூலை 22 அன்று நாடாளு மன்ற மழைக்காலக் கூட் டத் தொடர் தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது. இந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் முக்கிய அம்ச மாக ஜூலை 23 அன்று ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படு கிறது. அதைத் தொடர்ந்து 6 புதிய மசோதாக்களை ஒன்றிய அரசு அறி முகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அரசு தாக்கல் செய்யவுள்ள மசோதாக்கள் பட்டியல்: நிதி மசோதா, பேரிடர் மேலா ண்மை மசோதா, கொதிகலன்கள் மசோதா, பாரதிய வாயுயன் விதேயக் மசோதா (சிவில் விமா னப் போக்குவரத்து), காபி மசோதா, ரப்பர் மசோதா ஆகிய 6 மசோ தாக்கள் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குழுக்கள் அமைப்பு 6 மசோதாக்களை பட்டியலி டுவது தொடர்பாக மக்களவை சபா நாயகர் ஓம் பிர்லா தலைமை யில் குழு ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது. அக்குழுவில் கொடிக்குனில் சுரேஷ் (காங்கிரஸ்), கவுரவ் கோ கோய் (காங்கிரஸ்), லால்ஜி வர்மா (சமாஜ்வாதி), தயாநிதி மாறன் (திமுக), அரவிந்த் சாவந்த் (சிவ சேனா- உத்தவ்), சுதிப் பந்தோ பாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்), பி.பி.சவுத்ரி (பாஜக), ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு (தெலுங்கு தேசம்), நிஷிகாந்த் துபே (பாஜக), சஞ்சய் ஜெய்ஸ்வால் (பாஜக), திலேஷ்வர் காமத் (ஐக்கிய ஜனதா தளம்), பர்த்ருஹரி மஹ்தாப் (பாஜக), பைஜயந்த் பாண்டா (பாஜக), அனுராக் தாக்கூர் (பாஜக) ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.