புதுதில்லி கொரோனா வைரஸ் மிக மோசமான அளவில் பரவிய காலமான 2021 மே மாதம் 29 அன்று பிஎம் கேர்ஸ் நன்கொடை திட்டம் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்காக தொடங் கப்பட்டது இந்த திட்டம் என்று கூறப் பட்டது. குழந்தைகளின் 23 வயது வரை தேவையான உதவிகளை வழங்கும் பொருட்டு பிஎம் கேர்ஸ் குழந்தைகள் திட்டம் கொண்டு வரப்பட்டது என பிர தமர் மோடி அறிவித்தார். அரசு அதிகாரி கள், சாதாரண மக்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பி னரும் பிஎம் கேர்ஸ் திட்டத்தில் நன்கொடை அளித்தனர். ஆனால் பிஎம் கேர்ஸ் திட்டத்தில் எவ்வளவு பணம் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது? இதுவரை எவ்வ ளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை வெளியிட மோடி அரசு மறுக்கிறது. பிஎம் கேர்ஸ் பணத்தில் சொந்த (பாஜக) கட்சிக்காக செலவு எதுவும் செய்யப் படுகிறதா? என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது. இந்நிலையில், பிஎம் கேர்ஸ் குழந்தைகள் திட்டத்தில் பொருளா தார உதவி கோரி விண்ணப்பிக்கும் 51% குழந்தைகளின் மனுக்கள் நிராக ரிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதுகுறித்து மகளிர் மற்றும் குழந் தைகள் மேம்பாட்டு வளர்ச்சி அமைச் சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ மான அறிக்கையில்,”நாடு முழுவதும் உள்ள 33 மாநிலங்கள் மற்றும் யூனி யன் பிரதேசங்களில் உள்ள 613 மாவட்டங்களில் இருந்து 9,331 விண் ணப்பங்கள் பிஎம் கேர்ஸ் குழந்தை கள் திட்டத்தின் மூலம் பொருளாதார உதவி கோரி விண்ணப்பிக்கப்பட்டன. அதில் 4,532 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. 4,781 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், 18 மனுக்கள் நிலுவையில் உள்ளன” என கூறப்பட்டுள்ளது. 4,781 விண்ணப்பங்கள் நிராகரிக் கப்பட்டது தொடர்பாக எவ்வித விளக் கமும் அளிக்காத நிலையில், பெற் றோரை இழந்த குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட பிஎம் கேர்ஸ் திட்டத் தில், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கே தவி மறுக்கும் மோடி அரசின் செயல் பாடு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.