டெல்அவிவ்/தில்லி, செப். 25- எட்டு நாள் ஆட்சேர்ப்பு இயக்கம் மூலம் இஸ்ரேல் அரசு 10,000 இந்திய இளைஞர்களை போர்ப் பகுதி களுக்கு வேலைக்கு அழைத்துச் செல்ல உள்ளது.
இந்த ஆள்சேர்ப்பு இயக்கம் புனேவில் உள்ள அவுந்த் தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் நடந்துள்ளது.
இஸ்ரேல் காசா மீதான போரை துவங்கிய பிறகு இஸ்ரேலில் கட்டு மானம் உள்ளிட்ட பணிகளில் இருந்த சுமார் 1 லட்சம் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் அரசு வேலையில் இருந்து துரத்திவிட்டது.
இந்நிலையில் அந்நாட்டின் கட்டு மானம், பெயிண்டிங், வெல்டிங் உள்ளிட்ட பணிகளை செய்வதற்காக, வேலையின்மையால் பாதிக்கப் பட்டுள்ள இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க இந்திய இஸ்ரேல் அரசுகளுக்கிடையே 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது.
இதன் அடிப்படையில் இந்தியா வில் வேலையின்மை அதிகமுள்ள பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா, உபி உள்ளிட்ட மாநிலங் களில் இருந்து இளைஞர்களை நேர்முகத்தேர்வின் மூலம் இஸ்ரேல் நிறுவனங்கள் பணிக்கு எடுத்து வருகின்றன.
தற்போது வரை 4,800 இளை ஞர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப் பட்டுள்ளனர் என திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இதன் பிறகு கூடுத லாக செப்டம்பர் 18 அன்று 1500 தொழி லாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.
இதன்மூலம் போருக்குப் பிறகு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் கூடுதலாக 10,000 இளைஞர்களை வேலைக்கு எடுக்க இஸ்ரேல் முதலாளிகள் முடிவெடுத் துள்ளனர். இதனையும் இந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
காசாவுடனான போரை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் தற்போது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புடன் போரை தீவிரப்படுத்தி யுள்ள நிலையில் இஸ்ரேலின் சுய நலத்துக்காக இந்திய இளை ஞர்களை மோடி அரசு பலி கொடுக்க தீவிரமாக செயல் படுகிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த இரு நாட்களாக இஸ்ரேலின் தெற்கு எல்லை, துறைமுகம், தலைநகர் ஆகிய பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் மோடியின் முடிவு நூற்றுக்கணக்கான இந்திய இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என எச்சரிக்கையும் எழுந்துள்ளது.
ஆனாலும் மோடி அரசாங்கம் இஸ்ரேலுக்கு ஆயுத உபகரணங் களை வழங்குவது, வேலைக்கு தொழிலாளர்களை அனுப்புவது என தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.