புதுதில்லி, ஜூலை 26- ஜிஎஸ்டி வரியை அதிகரித்து உணவுப்பொருட் கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்திய மோடி அரசைக் கண்டித்து கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஜனநாய கத்தை ஒடுக்கும் மோடி அரசின் இச்செயலுக்கு எம்.பி.க்களும் அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் களின் உரிமையை பறிக்க நினைக்கும் மோடி அர சின் ஆணவத்துக்கு அடிபணியமாட்டோம் என நாடா ளுமன்றத்தில் எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அத்தியா வசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பு, பண வீக்கம், கேஸ் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை விவாதிக்க வேண்டுமென வலி யுறுத்தி வருகின்றனர். ஆனால் கார்ப்பரேட்களுக்கு ஆதரவான மோடி அரசு விவாதிக்க மறுத்து வருகிறது.
ஜூலை 25 அன்று மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வுக்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தி சபையின் மையப் பகுதிக்கு வந்து விவாதம் நடத்தக்கோரி முழக்க மிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மோடி அரசு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழு வதும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்களை இடைநீக்கம்செய்தது. உறுப்பினர்கள் கோரிக்கைகளை எழுப்புவது “இடையூறாக” உள்ளதாகக் கூறி சபாநாயகர் ஓம் பிர்லா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியதும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ‘கார்கில் தினத்தை’ நினைவு தினத்தை குறிப்பிட்டு ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
காலை 11:45 மணிக்கு காங்கிரஸ் உறுப்பினர்களின் இடைநீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பியவாறு சபாநாயகர் இருக்கையை நோக்கி முன்னேறினர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையை பறிக்க நினைக்கும் ஆணவத்துக்கு அடிபணிய மாட்டோம் என இடைவிடாது முழக்கம்எழுப்பினர். தங்களது இடைநீக்கம் “ஜனநாயகத்தை கொலை செய்வதற்கு சமம்” எனக் குற்றம் சாட்டி, இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர் கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தங்களது ஒற்றுமையை வெளிப் படுத்தும் வகையில், இடதுசாரி கட்சிகள், என்சிபி, திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக் கங்களை எழுப்பினர். சில உறுப்பினர்கள் “அமலாக்கத்துறையின் ஆட்சியை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று குரலெழுப்பினர். காங்கிரஸ் உறுப்பினர்களை இடை நீக்கம் செய்தது “ஜனநாயகத்தின் மீது எழுதப்பட்ட அகற்ற முடியாத கறை” என்று கூறிய காங்கிரஸ் உறுப்பினர்கள், அவையில் மக்கள் பிரச்சனைகளை எழுப்புவதால் அரசு எங்களை “அச்சு றுத்த” முயற்சிக்கிறது. இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்றனர்.
மோடி அரசின் அராஜக நடவடிக்கை
நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பி யவர்களை இடை நீக்கம் செய்யும் வகையில் மோடி அரசு நட வடிக்கை மேற்கொண்டது. இதுகுறித்து நாடாளுமன்ற விவ காரங்களுக்கான இணையமைச்சர் வி.முரளீதரன், மாநி லங்களவையில் தீர்மானம் ஒன்றை முன்வைத்தார். விதி 256- இன் கீழ் சபையின் இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட சபாநாயகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் டாக்டர் வி.சிவதாசன், ஏ.ஏ.ரஹீம் மற்றும் சந்தோஷ் குமார் (சிபிஐ), எம்.எம். அப்துல்லா, ஆர்.கிரிராஜன், என்.ஆர். இளங்கோ, எம்.சண்முகம், என்.வி.என். சோமு கனிமொழி (திமுக), சுஸ்மிதா தேவ், மௌசம் நூர், சாந்தா சேத்ரி, டோலா சென், சாந்தனு சென், அபி ரஞ்சன் பிஸ்வர், நதிமூல் ஹக் (திரிணாமுல்), லிங்கையா யாதவ், ரவிகண்ட்ர வடி ராஜூ, தாமோதர் ராவ் தேவகொண்டா (டிஆர்எஸ்) உட்பட 19 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் மாநிலங்க ளவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.