states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நீட்தேர்வில் 1,500 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதி விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மேலும்  ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில், “ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதி பதிகள் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

மோடி அரசின் நேரடி சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ள தில்லியின் வட மேற்கு பகுதியில் உள்ள  ஜஹாங்கிர்புரி பகுதியில்  15 வயது சிறுவன் ஒருவன் வீட்டின் அருகே அடை யாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டான்.

ஐபிஎஸ் அதிகாரி அலோக் குமாருக்கு கொலை  மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  ஜெயேஷ் பூஜாரியை போலீஸார் புதனன்று பெல காவி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்  போது குற்றம் சாட்டப்பட்ட ஜெயேஷ் பூஜாரியின் அறிக்கை நீதிமன்றத்தில் ஏற்கப்படாததால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய தாக கூறப்படுகிறது.

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வியா  ழனன்று இத்தாலி செல்கிறார். 3ஆவது முறை யாக பிரதமராக மோடி பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி செல்கிறார்.

மக்களவைத் தேர்தலில் கன்னோஜ் தொகுதி யில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சமாஜ்  வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கர்ஹால் சட்டமன்ற  உறுப்பினர் பதவியை புதனன்று ராஜினாமா செய்தார்.

24 ஆண்டுகளுக்கு முன்னர் தில்லி செங் கோட்டையில் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி முகமது ஆரிப்-பின் கருணை மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்மு நிரா கரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து  மதிப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில், அவரது  பேரனும் 9 வயதில் கோடீஸ்வரனாகி இருப்பது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் அடிக்கடி மின்னஞ்சல் மற்றும்  இணையதளம் மூலம் தில்லி அருங்காட்சி யகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட் டுள்ளது.

“ஆந்திராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமை யவுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுமா என்பது உள்பட  பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி  விளக்கம் அளிக்க வேண்டும்” என காங்கிரஸ் கட்சி  வலியுறுத்தியுள்ளது.