states

img

வாரணாசியில் மாதர் சங்கத்தினர் போராட்டம்

வாரணாசியில் மாதர் சங்கத்தினர் போராட்டம்

19 வயது பெண் மீதான பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், பெண்கள் நல அமைப்பினர் வாரணாசியில் போராட்டம் நடத்தினர்.  நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில் மாதர் சங்க உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,”பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பரால் கடத்தப்பட்டு, மயக்க மருந்துகளால் உணர்விழக்கச் செய்யப்பட்ட பின்னர், 23 ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார். இந்த வழக்கை மறைப்பதற்காக, பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தையை களங்கப்படுத்தும் வதந்திகளை காவல்துறை பரப்புகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது”  என குற்றம் சாட்டினர்.