states

சீமான் மீது நடவடிக்கை எடுத்திடுக!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திரைக்கலைஞர் விஜயலட்சுமி, சீமான்  தன்னை  காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து தன் வாழ்வை சீரழித்து விட்டதாகவும் சென்னை காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்துவிட்டு செய்தி யாளர்களை சந்தித்த திரைக்  கலைஞர் விஜயலட்சுமி கடந்த அதிமுக ஆட்சியில் இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்த போது சீமான் ஒரு சில நபர்களை வைத்து தன்னிடம் பேசி  தன்னை  மனைவியாக ஏற்றுக் கொள்வதாக கூறி  புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தன்னை எழுதிக் கொடுக்க நிர்பந்தித்ததாக தெரிவித்துள்ளார். திரைக்கலைஞர் விஜய லட்சுமி கடந்த மூன்று ஆண்டு களாக   சீமானுக்கும் தனக்கும்  உள்ள மேற்கண்ட பிரச்சனை குறித்து  சில வீடியோ பதிவு களையும் வெளியிட்டு இருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் சீமான்  தன்னு டன் பேசும் வீடியோ ஆதாரங்களை யும் வெளியிட்டு இருக்கிறார். இந்தப் பின்னணியில் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கூட்டம் ஒன்றில் பேசிய  சீமான், விஜயலட்சுமியின் புகா ருக்கு பதிலளிக்காமல் விஜய லட்சுமியை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அவமானப்படுத்தி இருக்கிறார். 

உகந்தது அல்ல

தமிழகத்தில் அரசியல் கட்சி  தொடங்கி அதன் ஒருங்கி ணைப்பாளராக செயல்பட்டு வரும் சீமான் தனது மேடைகளில் பெண் சமத்துவம் குறித்தும், பெண்ணுரி மை குறித்தும் பேசி வருவதோடு, தமிழகத்தில்  இளைஞர்களுக்கு முன்னுதாரணமான தலைவராக தான் செயல்படுபவராக காட்டி வரு கிறார். தன் மீது ஒரு பெண் இவ்வ ளவு பெரிய குற்றச்சாட்டை தொடர்ச்சியாக வைக்கிற போது அதை அவதூறாக பேசுவதும், பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவு படுத்துவதும் சரியான நட வடிக்கை அல்ல.  தன் மீதான குற்றச் சாட்டில் உண்மை இல்லாதபட்சத் தில் சட்ட ரீதியான நடவடிக்கை க்கு செல்ல வேண்டுமே தவிர, பொறுப்பு மிக்க ஒரு அரசியல் கட்சி தலைவராக  இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பேசுவது ஒரு பண்பட்ட தலைவருக்கு உகந்தது அல்ல,

உரிய பிரிவில்  வழக்கு பதிக!

மேலும்,  தன்னை நாம் தமிழர்  கட்சியினர் தொடர்ச்சியாக மிரட்டு வதாகவும், தன்னைப் பற்றி ஆபாச மாக பேசி வீடியோ வெளியிடுவதா கவும் விஜயலட்சுமி கூறியுள்ளார். அது குறித்தான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படும் சீமான்   விஜய லட்சுமிக்கு எதிரான  தன் கட்சியின ரின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியதாக தெரியவில்லை. உடனடியாக விஜயலட்சுமி குறித்து ஆபாசமாக அவதூறாக பேசும் நாம் தமிழர் கட்சியினர் மீது கட்சி ரீதியான நடவடிக்கைகளை சீமான் மேற்கொள்ள வேண்டும். விஜயலட்சுமி அவர்கள் சீமான் மீது கொடுத்துள்ள புகாரை  எந்த வித அரசியல் தலையீடுகளும் இன்றி நியாயமான முறையில்  தமிழக காவல்துறை விசாரித்து  உரிய பிரிவில் வழக்குப் பதிவு  செய்து பாதிக்கப்பட்ட விஜய லட்சுமிக்கு நீதி கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும். தமிழகத்தில் பாலியல் ரீதியாக ஒடுக்கப்படுகிற துன்புறுத்தப்படு கிற பெண்களுக்கு சட்ட தலை யீட்டின் மூலமாகவும், மக்கள் போராட்டங்கள் மூலமாகவும் ஆத ரவு கொடுக்கிற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சீமானால் பாதிக்கப்பட்டு நியாயம் கேட்டு போராடும் விஜயலட்சுமிக்கு ஆதரவாக  துணை நிற்கும் என்று சங்கத்தின்  மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, பொதுச் செய லாளர் அ.ராதிகா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளனர்.