states

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரபிக் கடலில் தூக்கியெறிவோம்!

மலப்புரம்/கண்ணூர், மார்ச் 26- குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரபிக் கடலில் தூக்கியெறிவோம் என்ற முழக்கத்துடன் மலப்புரத்திலும், கண்ணூரிலும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற பிரம்மாண்ட அணிவகுப்புகளை இடது ஜனநாயக முன்னணி நடத்தியது. இரண்டு இடங்களிலும் பங்கேற்று உரையாற்றிய கேரள முத லமைச்சர் பினராயி விஜயன், ஆர்எஸ்எஸ் கோட்பாட்டுக்கும் பாரத பண்பாட்டுக்கும் எந்த தொடர்பு இல்லை என்று கூறினார். அவர் ஆற்றிய உரைகளின் சாராம்சம் வருமாறு:

யூனிஸ்டுகளை உள் எதிரி களாக ஆர்.எஸ்.எஸ் அறிவித்துள் ளது. ஜெர்மனியில் யூதர்களையும் போல்ஷிவிக்குகளையும் உள் எதிரிகளாக ஹிட்லர் பார்த்தார். இன்னும் சொல்லப் போனால் ஹிட்லரின் ஜெர்மனியிலும், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸிலும் சிறுபான்மையினரும், சமூகங்களும் எதிரிகளாகவே பார்க்கப்பட்டன. ஹிட்லரை கண்டிக்காத சிலர் இருந்தனர். அது ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்கள், முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவர்களாக பார்க்கின்ற னர். நாட்டுக்காகப் போராடிய வர்கள் அனைத்து சாதி, மதத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டுப்பற்றுடன் அதே உணர்வுடன்தான் நாட்டுக் காகப் போராடினார்கள். அரச மைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது அதை நிராகரித்தது ஆர்எஸ்எஸ்தான். முஸ்லிம் மக்களை நாட்டை விட்டு வெளியேற்ற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிப்பது நாட்டை கலாச்சார ரீதி யாக அழிப்பதாகும். இந்தியாவில் உள்ள பாஜக அரசு, அகதிகளை மதத்தின் அடிப்படையில் பிரிக்கி றது. குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு எதிராக தில்லியில் நடந்த  போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா ளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்  யப்பட்டனர். இந்த சட்டத்திருத்தத் திற்கு எதிரான மக்கள் போராட்டத்  தில் பங்கேற்றதற்காக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்  செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. அன்றைய தினம் தயாரிக்கப் பட்ட குற்றப்பத்திரிகையில் யெச்சூ ரியின் பெயர் இருக்கிறது.

மக்களை திசை திருப்பவே கெஜ்ரிவால் கைது

நாடு கண்டிராத மிகப்பெரிய ஊழலில் இருந்து கவனத்தை திசை  திருப்பவே தில்லி முதல்வர் அர விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப் பட்டார். தேர்தல் பத்திரங்கள் என்ற போர்வையில் கோடிக்கணக்கில்  பணம் புழங்கியது. இந்தத் தொகை யெல்லாம் யாருக்கு பாய்ந்தது என்ற தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இது பாஜகவுக்கும், ஒன்றிய அரசுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வரு கிறது. அதிலிருந்து நாட்டின் கவ னத்தை திசை திருப்பவே கெஜ்ரி வால் கைது நடவடிக்கை. அவர்  தற்போது காவலில் வைக்கப்பட் டுள்ளார். தேர்தல் பத்திரம் போன்ற அப்  பட்டமான ஊழலை, ஒரு போதும்  விசாரிக்க மாட்டார்கள் என்ற எண்  ணத்தில் ஒன்றிய ஆட்சியாளர் களுக்கு தைரியம் வந்தது. பத்தி ரங்களை வாங்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை கம்யூனிஸ்ட் கட்சி கள் எடுத்தன. அதோடு, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியும் சட்டப் போராட்டத்தை நடத்தியது. நாடு கண்டிராத மிகப்பெரிய ஊழல் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் மூலம் அம்பலமானது. இவ்வாறு அவர் பேசினார். கண்ணூர், மலப்புரத்தில் மாபெரும் அணிவகுப்புகள் மக்களை பிரித்தாளும் அர சியலுக்கு மதத்தைப் பயன்படுத்து வதற்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும் எதிராக கண்ணூரில் ஞாயிறன்று மாலையிலும், மலப்  புரத்தில் திங்களன்று காலையிலும்  மாபெரும் அணிவகுப்புகள் நடை பெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். நகர்ப்புறம், கிராமம் என்ற வேறுபாடு இல்லா மல் ‘அரபிக்கடலில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எறிவோம்’ என்ற முழக்கத்துடன் மக்கள் பேரணியில் குவிந்தனர். எழுத்தாளர்கள், பேச்சாளர் கள், கலைஞர்கள், சமூக-கலாச்  சார அமைப்பாளர்கள், வெகுமக் கள் அமைப்புகள், சங்கங்கள், அனைத்து கேரள ஜம் இயத்துல் உலமா (EK), அகில கேரள ஜம்  இயத்துல் உலமா (AP), நத்வதுல்  முஜாஹிதீன், எம்இஎஸ் (MES), சிறு பான்மை கலாச்சாரக் குழு, அகில இந்திய அமைதி ஒற்றுமைக் குழு, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் பங்கேற்றனர். முதல்வர் பினராயி விஜயன் மேடைக்கு வருவதற்குள் மைதா னம் நிரம்பி வழிந்தது. முன்னெப்  போதும் இல்லாத வகையில் சிறு பான்மையினர் பேரணியில் கலந்து  கொண்டனர். லட்சக்கணக்கா னோர் பங்கேற்பார்கள் என ஏற் பாட்டாளர்கள் அறிவித்திருந்த நிலையில், எதிர்பார்த்ததை விட அதிகமானோர் பேரணிகளில் கலந்துகொண்டனர்.