விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ். எந்த பங்களிப்பும் செய்யாத நிலையில், மிகப் பெரிய அளவில் இருந்த அந்தப் புத்தகத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. அப்படி என்னதான் பங்களிப்பு செய்தார்கள் என்று திறந்து பார்த்தோம். முதல் பக்கத்திலேயே ஆங்கிலேயர் காலணியை நாவால் வருடுகிற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அடுத்து காந்தியார் கொலையை குறிக்கின்ற வகை யிலான சித்திரம் வந்தது. அடுத்தடுத்த பக்கங்கள் அனைத்தும் காலியாக இருந்தன. ஏனென்று கேட்ட போது, நீங்களும் அந்த வரலாற்றை நிரப்பலாம் என்று கையில் பேனாவைத் தந்தார்கள். மூன்று பெரிய பூஜ்ஜியங்களை வரைந்தோம். இப்படிப்பட்ட பூஜ்ய வரலாற்றைக் கொண்ட சனாதன வாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்திய த.மு.எ.க.ச. தோழர்களுக்கு வாழ்த்துகள். தேர்தல் களத்தில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி சனாதனத்தை ஒழிப் போம்.”
-தமுஎகச மாநாட்டு நிகழ்வு குறித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவு