ஹனுமன்கர் (ராஜஸ்தான்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜஸ்தான் மாநில 24ஆவது மாநாடு, ராஜஸ்தான் மாநிலம் ஹனு மன்கரில் வெற்றிகரமாக நடை பெற்றது. மாநாட்டின் பிரதிநிதிக ளால் 35 பேர் கொண்ட மாநிலக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநி லக்குழு உறுப்பினர்களால், கிசான் பரீக் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 11 பேர் கொண்ட மாநில செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் புதிதாகத்தேர்வு செய்யப்பட்ட மாநிலச் செயலா ளர் கிசான் பரீக் பேசுகையில், பாஜகவின் கார்ப்பரேட்-மதவெறி இரட்டை என்ஜின் அரசாங்கத்தை எதிர்த்து நடைபெறும் போராட் டங்கள் உறுதியுடன் தொடரும் என்று கூறினார். முன்னதாக மாநிலச் செய லாளரின் அறிக்கை மீதான விவாதத் துக்கு அம்ரா ராம் தொகுப்புரை வழங்கினார். அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் நிறைவுரையாற்றினார். பிரதி நிதிகள் மாநாட்டின்போது மத்தியக் குழு உறுப்பினர் விஜூகிருஷ்ணன் உரை நிகழ்த்தினார். மாநாடு நிறைவடையும் சமயத்தில் எண்ணற்ற விவசாயப் போராட் டங்களின் வீரத் தளபதியும் மக்க ளவை உறுப்பினருமான அம்ரா ராம் பாராட்டப்பட்டார். (ந.நி.)