கொச்சி, ஏப்.26- நாட்டிலேயே மின்வாகன கொள்கையை (இவி பாலிசி) கொண்ட முதல் மாநிலம் கேரளா என்றும், மாநிலத்தில் மின்சார வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகளை தயாரிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் கூறினார். களமசேரியில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை மாவட்ட அளவில் திறந்து வைத்து அவர் பேசினார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவிலேயே மின்வெட்டு இல்லாத மாநிலம் கேரளம். இது தொழில்துறைக்கும் பயனளிக்கும் என்று அமைச்சர் கூறினார். முதற்கட்டமாக, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் பரிந்துரைக்கும் ஐந்து இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும் என்றார் அமைச்சர். மாநில அரசு, மின் துறை மற்றும் மின் வாரியம் ஆகியவை மின் தன்னிறை வை இலக்காகக் கொண்டு செயல்படுகின்றன. சூரிய மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இதை அடைய சாத்தியமான வழிகளைத் தேடுவதாகவும் அவர் கூறினார். களமச்சேரியில் சார்ஜிங் ஸ்டேஷன் மட்டுமின்றி காந்திநகர், வடக்கு பரவூர், கலூர், வைட்டிலா, அங்கமாலி, மூவாட்டுபுழா ஆகிய இடங்களில் உள்ள சார்ஜிங் நிலையங்களையும் அமைச்சர் திறந்து வைத்தார். சிறப்பு மென்பொருளைப் பயன்படுத்தி இந்த இடங்களில் வாகனங்களை சார்ஜ் செய்ய லாம். வேகமாக சார்ஜ் செய்யும் வசதி இருப்பதால், வீட்டில் சார்ஜ் செய்யும் நேரத்தின் கால்வாசி நேரம் கூட வாகனங்களுக்குத் தேவையில்லை. முதல் கட்டமாக, மாவட்டத்தில் 136 இடங்களில் விரிவான சார்ஜிங் நெட்வொர்க்கை கேஎஸ்இபி அமைக்கும். தற்போது சார்ஜிங் நிலையங்களில் கார் வசதி மட்டுமே உள்ளது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோரிக்ஷாக் களுக்கு 125 கம்பத்தில் பொருத்தப்பட்ட சார்ஜ் சென்சார்களை நிறுவ கேஎஸ்இபி முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி களமச்சேரியில் உள்ள கேஎஸ்இபி வளாகத்தில் நடைபெற்றது.