15 துறைமுகங்களில் கேரளத்தில் விழிஞ்ஞம் முதலிடம்
விழிஞ்ஞம் சர்வதேச கொள்கலன் முனையம் 40 கப்பல்களில் இருந்து 78,833 டிஇயு (TEU) சரக்குகளை கையா ண்டது. இதன் மூலம், இந்தியாவின் தென் கிழக்கு பிராந்தியத் தில் உள்ள 15 துறை முகங்களில் விழிஞ் ஞம் முதலிடத்தில் உள்ளது. விழிஞ்ஞம் துறை முகத்தில் சோதனை ஓட்டம் தொடங்கி எட்டு மாதங்களுக்குப் பிறகும், வணிக நட வடிக்கைகள்தொடங்கி மூன்று மாதங்களுக்குப் பிறகும் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. விழிஞ்ஞம் இதுவரை 193 கப்பல்களில் இருந்து 3.83 லட்சம் டிஇயு (ஒரு TEU என்பது 20x8x8 அடி நீள, அகல, உயரம் கொண்ட கொள்கலன்) சரக்குகளை கையாண்டுள்ளது. வரி வருவாய் ரூ.37 கோடிக்கு மேல் கிடைத்தது. விழிஞ்ஞம் துறைமுகம் 2028 ஆம் ஆண்டுக்குள் முழு மையான துறைமுகமாக மாறும்.