தமன்னாவுக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு
இந்தி நடிகையை நியமிக்கக் கூடாது
நாட்டின் முன்னணி சோப் பிராண்டுகளில் ஒன்று “மைசூர் சாண்டல்”. இது கர்நாடக அரசின் (Karnataka Soaps and Deter gents Limited - KSDL) தயாரிப்பு ஆகும். இந்த மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதுவராக நடிகை தமன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவ ருக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.6.2 கோடி சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதுவராக இந்தி நடிகையை நியமிக்கக் கூடாது என கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத் துள்ளன. இதுதொடர்பாக வெளியான அறிக்கைகளில்,”கன்னடத் திரையுல கில் திறமைக்குப் பஞ்சமா? உள்ளூர் நடிகைகளை நியமிக்காமல் இந்தி நடிகையை நியமிப்பது ஏன்?. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அமைச்சர் விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக அமைச் சர் எம்.பி.பாட்டீல் விளக்கம் அளித்துள் ளார். அதில்,”மைசூர் சாண்டல் சோப்பை கர்நாடகாவிற்கு அப்பாலும் கொண்டு செல்லவே விளம்பரத் தூதுவராக நடி கை தமன்னா நியமனம் செய்யப்பட்டுள் ளார்” என அவர் கூறியுள்ளார்.