சென்னை, மே 26- “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- நாகை மாவட்டம், திருத்துறைப் பூண்டியிலுள்ள அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த இஸ்லாமிய பெண் மருத்து வர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற கார ணத்தால் பாஜகவைச் சேர்ந்த புவனேஸ்வர ராம் என்பவர் அந்த பெண் மருத்துவரிடம் தக ராறில் ஈடுபட்டார். ஒரு பெண் மருத்துவரிடம் இதுபோன்ற வெறுப்பு பேச்சைப் பேசுவதும், அவர், ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தால் அவரை மிரட்டுவதும் பொது அமைதிக்குக் குந்த கம் ஏற்படுத்தும் செயலாகும். மேலும், மருத்துவர்கள், மருத்துவ சேவைப் பணியாளர்கள் மத்தியில் அமைதி யின்மையை உருவாக்கி, அப்பகுதியில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது. எனவே, பெண் மருத்துவரை மிரட்டிய நபரை தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணி யாளர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு) சட்டம் மற்றும் மத ரீதியான வெறுப்பு பேச்சுகளைப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்த முயன்ற காரணத்தாலும் கடுமையாக நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் பேட்டி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்த விவகாரம் குறித்து. விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாவட்ட மருத்துவ அலுவலரிடம் உத்தரவிடப்பட்டுள் ளது. அறிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.