states

img

நீதித்துறைக்கே சவால் விடும் நித்தியானந்தாவின் சொத்துக்களை நீதிமன்றம் பாதுகாக்க வேண்டுமா?

உயர்நீதிமன்றம் காட்டமான  கேள்வி - நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை,அக்.22- பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பித்தும் தலைமறைவாக இருந்துகொண்டு இந்திய நீதித்துறைக்கே சவால் விடும் நித்தியானந்தாவின் சொத்துக்களை நீதிமன்றம் பாதுகாக்க வேண்டுமா? என்று உயர்நீதிமன்றம் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளது.நித்தி யானந்தா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியைச் சேர்ந்த நித்தி யானந்தாவின் சீடரான சுரேகா தாக்கல் செய்த மனுவில், கணேசன் என்பவருக்கு சொந்தமான இராஜபாளையம் அருகே உள்ள 45 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் அபகரிக்க முயன்றதாக தேனி மாவட்டம் சேத்தூர் காவல்நிலையத்தில் நான் உள்ளிட்ட மூன்று நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள னர். ஆனால் நாங்கள் அது போன்று எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் விதிக்கும்  நிபந்தனை களுக்கு முழுமையாக கட்டுப்படுவோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 22 செவ்வாய்க்கிழமையன்று நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு நடைபெற்றது. அப்பொழுது மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என புகார் தாரர் தரப்பில் இடை யீட்டு  மனு தாக்கல் செய்யப்பட்டது. நித்தியானந்தாவின் சீடர்கள் இவரை அச்சு றுத்தும் வகையில் இது போன்ற செயல்களில் ஈடு படுவதால் இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். நீதிபதி கூறுகையில், நித்தியானந்தா தலை மறைவாய் இருந்து கொண்டு இந்திய நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுகிறார். அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது. ஆனால் நீதிமன்றத்திற்கு வருவ தில்லை. ஆனால் அவரது சொத்துக்களை நீதி மன்றம்  பாதுகாக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும், மனுதாரர் வழக்கறிஞர் என்பதால் இந்த இட விவகாரத்தில் இனி தலை யிட மாட்டேன் என உத்தரவாதம் பத்திரம் தாக்கல் செய்தால் அவருக்கு முன் ஜாமீன் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார். இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.