states

img

தலைவர்களானாலும், விளையாட்டு வீர்களானாலும் சரி அரசியல் சாசனத்தின் முகவுரையை படியுங்கள்!

புதுதில்லி, ஏப்.26- “நமது நாட்டு மக்கள் அனை வரும் நமது நாட்டின் அழகான அர சியல் சாசனத்தின் முகவுரையை படியுங்கள்” என்று இந்திய கிரிக் கெட்டின் பிரபல வேகப்பந்து வீச்சா ளர் இர்பான் பதான் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமநவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலம் என்ற பெயரில் சங்-பரி வார் அமைப்புகள், அண்மையில் முஸ்லிம் குடியிருப்புகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்  லிம்களின் வீடு, கடைகளை தங்க ளுக்குள்ள ஆட்சியதிகாரத்தின் மூலம் புல்டோசர் கொண்டு இடித்  துத் தரைமட்டமாக்கினர். ம.பி., குஜராத், தில்லி ஆகிய இடங்களில் நடந்த இந்த சம்பவங்கள், நாடு முழு வதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்  தின. தற்போது இந்த விவகாரம்  உச்சநீதிமன்றத்தின் விசாரணையி லும் உள்ளது.

நரேந்திர மோடி தலைமையி லான ஒன்றிய அரசு அதிகாரத்திற்கு வந்தது முதலே, கடந்த 8 ஆண்டு களாக, குடியுரிமைத் திருத்தச் சட்  டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்  தஸ்து நீக்கம், ஹிஜாப் அணியத் தடை, கோயில் விழாக்களில் முஸ்  லிம்கள் கடை போடத் தடை, மசூதி களில் ஒலிபெருக்கி அமைக்கத் தடை என இஸ்லாமியர்கள் மீது அடுத்தடுத்து ஒடுக்குமுறைகள் ஏவப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவங்கள் குறித்து, இந்திய கிரிக்  கெட்டின் பிரபல வேகப்பந்து வீச்சா ளரான இர்பான் பதான், தனது டுவிட்டர் பக்கத்தில், மறைமுகமாக கவலை தெரிவித்திருந்தார். “என் நாடு, என் அழகான நாடு, இந்த பூமியில் மிகப்பெரிய நாடாக இருக்கக் கூடிய சக்தி வாய்ந் தது... ஆனால்?” என்பதோடு நிறுத்தியிருந்தார். நாடு முழுவதும் நடைபெற்று வரும் மதவெறிச் சம்பவங்கள் நாட்டின் முன்னேற்  றத்திற்குத் தடையாக இருக்கின் றன என்பதை வெளிப்படையாக கூறாமல் தவிர்த்திருந்தார். இந்நிலையில், பாஜக ஆதரவு கிரிக்கெட் வீரரான அமித் மிஸ்ரா, ஆனால்..? என்று இர்பான் பதான் நிறுத்தியிருந்த வாசகத்தை முடிக்கும் விதமாக, “என் நாடு, என் அழகான நாடு, பூமியின் மிகச் சிறந்த நாடாக மாறும் சக்தி கொண்  டது. அப்படி மாற வேண்டுமென் றால் சிலர் இந்திய அரசியல் சட்  டமே தாங்கள் கடைப்பிடிக்க வேண்  டிய முதல் நூல் என்ற வழியில் செல்ல வேண்டும்” என்று கூறினார். அதாவது, இர்பான் பதான் உள்  ளிட்ட இஸ்லாமியர்கள் குரானை விட இந்தியா அரசியல் சாசனத்  தையே தங்களின் முன்னுரிமை யாக கொள்ள வேண்டும்.. என்று  பதானின் மதத்தை இழுத்திருந் தார்.

இதையடுத்து, அமித் மிஸ்ரா வுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசியலமைப்பு சட்ட முக வுரையின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதான் வெளி யிட்டார்.  “இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த, சமதர்ம நெறி சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடி யரசாக அமைக்கவும், அதன் குடி மக்கள் அனைவருக்கும் சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதி யும், சிந்தனை வெளிப்பாட்டில் நம்  பிக்கையும், பற்றார்வத்தில் மற்றும்  வழிபாட்டில் சுதந்திரமும், தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும், உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவ ரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்று மைக்கும், ஒருமைப்பாட்டிக்கும் உறுதியளிக்கும் உடன்பிறப்பு ணர்வை அவர்கள் அனைவரி டையே வளர்க்கவும், விழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு, 1949, நவம்பர் இருபத்து ஆறாம் நாளாகிய இன்று நம்முடைய அரசி யலைப்புப் பேரவையில், இந்திய அரசியலமைப்பை ஏற்று, சட்ட மாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்” என்று, அந்த வரிகள் இடம்பெற்றுள்ள அந்த முகவுரையைச் சுட்டிக்காட்டி, “நான் எப்போதும் பின்பற்றுவது இதுதான், அத்துடன் இந்திய மக்க ளாகிய அனைவரையும் இதனை தொடருமாறு வலியுறுத்துகிறேன், தயவுசெய்து படியுங்கள், மீண்டும் ஒருமுறை படியுங்கள்” என்று இர்  பான் பதான் உருக்கமான வேண்டு கோளை விடுத்துள்ளார்.