“பணவீக்கம் என் பது மோடியால் உரு வாக்கப்பட்ட பேரழிவு. பால் விலை லிட்டருக்கு ரூ. 2 அதிகரித்து உள்ள தால் மார்ச் முதல் நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தில்லியில் ஒரு சிலிண்ட ருக்கு ரூ.105 உயர்த்தப்பட்ட பிறகு வணிக பயன்பாட்டின் சிலிண்டர் விலை ரூ. 2 ஆயி ரத்தை தாண்டியுள்ளது. 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் வீட்டு பயன்பாட்டு சிலிண் டர்கள் விலை ரூ. 27 உயர்த்தப்படும் என்ற அச்சமும் உள்ளது. அவ்வாறு செய்தால் காங்கிரஸ் கட்சி தெருவில் இறங்கி போராட் டம் நடத்தும்” என்று காங்கிரஸ் மூத்த தலை வர் அல்கா லம்பா எச்சரிக்கை விடுத்துள் ளார். “வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண் டர் விலையை உயர்த்தியதன் மூலம், சாமானிய மக்களின் துயரங்களைப் பற்றி கவலைப்படவில்லை என்பதை மோடி அரசு தெளிவுபடுத்தியுள்ளது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.