states

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த இந்திய விவசாயத் துறை திட்டம்

புதுதில்லி, பிப்.12- 2024 ஆம் ஆண்டுக்குள் விவசாயத் துறையில் டீசல் இல்லாத பயன் பாட்டை அடைய, டீசலுக்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டு வரும் என்று ஒன்றிய மின்துறை அமைச் சர் ஆர்.கே.சிங் வெள்ளிக்கிழமை தெரி வித்தார். நாட்டின் ஆற்றல் மாற்ற இலக்கு கள் குறித்து விவாதிக்க மாநில அரசு அதிகாரிகளுடன் காணொலி வாயி லான கூட்டத்திற்கு சிங் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறு கையில், ஆற்றல் சேமிப்பு மற்றும் செயல்திறனுக்காக அர்ப்பணிக்கப் பட்ட ஒரு மாநிலம் சார்ந்த நிறுவனத் தின் தேவை மற்றும் அவசியத்தை சிங் வலியுறுத்தினார்.  அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தி யாவின் பருவநிலை தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மாநிலங்களின் பங்களிப்பை உறு திப்படுத்துவதும், ஒவ்வொரு மாநிலத் திற்கும் ஆற்றல் சேமிப்பு இலக்கு களை நிர்ணயிப்பதும் இக்கூட்டத்தின் நோக்கங்கள் ஆகும். “பொருளாதாரத்தின் சாத்திய மான துறைகளில் ஆற்றல் திறன் நட வடிக்கைகளை பெரிய அளவில் பயன் படுத்துவதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டு முயற்சிகளின் அவசியத்தை சிங் வலியுறுத்தினார்” என்று மின்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நாங்கள் புதிய மற்றும் நவீன இந்தியாவை உருவாக்கப் பாடுபடு கிறோம், இது நவீன ஏரியாற்றல் சக்தி அமைப்புகள் இன்றி நடக்காது. மேலும் அதை அடைய அனைத்து மாநிலங்களுடனும் இணைந்து செயல்பட நாங்கள் எதிர்நோக்கு கிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் கார்பன் உமிழ்வு தீவி ரத்தை குறைப்பதற்கான காப் 26  (COP26) பருவநிலை மாற்ற மாநாட் டில் பிரதமர் நரேந்திர மோடியின் உறு திப்பாட்டிற்கு இணங்க இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.