சில நாட்களுக்கு முன்பு நான் மணிப்பூர் சென்றிருந்தேன். அங்கு நான் சந்தித்த பெண்கள், குழந்தைகளின் கதைகள் அவ்வளவு கொடுமையாக உள்ளன. மணிப்பூரில் மகனை இழந்த தாய் ஒருவர், மகனின் சடலத்துடன் இரவு முழுவதும் இருந்ததை கண்ணீருடன் கூறினார். ஆனால் பிரதமர் மோடி இன்று வரை மணிப்பூர் செல்லவில்லை. ஏனென்றால் அவர், மணிப்பூர் இந்தியாவில் இல்லை என்று கருதுகிறார். பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தை கைவிட்டு விட்டார். தொடர் வன்முறைச் சம்பவங்களால் மணிப்பூர் இன்று பிரிந்து நிற்கிறது. நான் பேசும்போது மணிப்பூர் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறேன். ஆனால் உண்மையில் மணிப்பூரில் எதுவுமே இல்லை. மணிப்பூரின் நிலை இன்றுவரை சரி செய்யப்படவில்லை. மணிப்பூரை இரண்டாக பிளந்துள்ள னர். சுக்குநூறாக உடைத்து விட்டனர். மணிப்பூரில் இருக்கும் நிவாரண முகாமிற்கு நான் சென்றபோது, அங்கு இருக்கும் பெண்களை, குழந்தை களை சந்தித்துப் பேசினேன். அதனை இன்றுவரை பிரதமர் செய்யவில்லை. அதில் ஒரு பெண், தன் குழந்தையை தனது கண்முன்னே சுட்டுக்கொன்றதாக கூறினார். அவர் அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நின்றார். மணிப்பூரில் ‘இந்தியா படுகொலை’ செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டன. இந்தியா என்பது மக்களின் குரலை வெளிப்படுத்த கூடியது; இந்தியா அனைவருக்குமான வீடு; ஆனால், மணிப்பூரில் இந்தியாவை படுகொலை செய்துள்ளனர். பாரத மாதாவை படுகொலை செய்துள்ளனர். இவர்கள் தேசப்பற்றாளர்கள் அல்ல; தேசத் துரோகிகள்...”
(ராகுல் இவ்வாறு கூறியதும், பாஜக எம்.பி.க்கள் தாவிக் குதித்தனர். மோடி.. மோடி.. என்று அவர்கள் முழக்கமிட, பதிலுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ராகுல்.. ராகுல்.., இந்தியா.. இந்தியா.. என்று பதிலடி கொடுத்தனர்.) விரிவான விபரம் : 6