states

img

“5 மாநில தேர்தலை ஒத்திப்போடுவதே நோக்கம்”

“இந்தியா போன்ற நாடாளு மன்ற ஜனநாயகம் உள்ள  நாட்டில் ‘ஒரே நாடு ஒரே  தேர்தல்’ என்பதை நடைமுறைப் படுத்த முடியாது. ஏனென்றால், நமது நடைமுறையில் ஓர் அரசு அதன் பெரும்பான்மையை இழக்கும் போது இடையிலேயே கவிழலாம்; அதன் பின்னர் புதிய அரசு பதவி ஏற்கும். ஆனால், ‘ஒரே நாடு ஒரே  தேர்தல்’ என்பது நடைமுறைப் படுத்தப்படும்போது இதுபோன்ற நேரங்களில் (இடையில் அரசு கவிழும்போது) குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. அதாவது, நாம் ஜனநாயக அமைப்பில் இருந்து குடியரசுத் தலைவர் ஆட்சி முறைக்கு மாறுகிறோம். இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது.  இதுகுறித்து இந்த அரசு தெளி வாக அறிந்து வைத்திருக்கிறது. குடி யரசுத் தலைவர் ஆட்சி முறைக்கு பல்வேறு அரசியலமைப்பு சட்டத்  திருத்தம் அவசியம் என்பதையும் அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார் கள் என நான் நினைக்கிறேன். மாநிலங்களவையில் இந்த அர சுக்கு பெரும்பான்மை இல்லை. அரசுக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரியும் என்றாலும், இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிர தேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய  ஐந்து மாநிலங்களின் சட்டப்பேர வைத் தேர்தல்களை தள்ளிப் போடவே அரசு இந்த பலூனை (ஒரே  நாடு ஒரே தேர்தல்) ஊதிப் பறக்கவிடு கிறது. இந்த ஐந்து மாநில சட்டப்பேர வைத் தேர்தல்களிலும் பாஜக தோல்வி யடைந்து விடும் என்ற பயம் அவர் களுக்கு வந்துவிட்டது. அதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பெயரில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரை ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களை ஒத்திப் போட முயல்கிறார்கள். அந்த மாநி லங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி  நடைமுறைப்படுத்தப்படும்.”