states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்தியர்கள் 90 மணி நேரம்  கடினமாக உழைக்க வேண்டும் என பேசும்  பணக்காரர்களே, மக்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் வகையில் அவர்களுக்குக் கல்வி கொடுத்து அதிகமாக ஒழுக்கமான வேலைகளை உருவாக்குங்கள். கடினமாகவும் நீண்ட காலமாகவும் உழைக்க வேண்டும் என்று பேசுவதை நிறுத்துங்கள்.

9 ஆண்டுகளில், மோடி அரசு போலி ஸ்டார்ட் அப்களை மட்டுமே உருவாக்கியுள்ளது. உண்மை என்னவென்றால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மோடி அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. இந்த துறையில் என்ன வளர்ச்சி ஏற்பட்டாலும், அதற்கான பாராட்டு ஒன்றிய அரசுக்கு அல்ல,  தொழில்முனைவோரின் மனப்பான்மை மற்றும் புத்திசாலித்தனத்திற்கே சேர வேண்டும்.

இந்தியா கூட்டணியை வாழ வைக்காவிட்டால், எதிர்க்கட்சிகள் பிழைக்காது. அவர்கள் எதிர்க்கட்சிகளைக் கொன்று விடுவார்கள். நாடாளுமன்ற  தேர்தலுக்கு  மட்டுமே இந்தியா கூட்டணி என்பது உண்மைதான். ஆனால் அதை தக்கவைக்க வேண்டியது நாட்டின் தேவை.  

இந்த வலதுசாரிகளுக்கு உண்மை சரிபார்ப்பு கட்டுரைகளும் பிரச்சனையாக தெரிகின்றது. தவறான தகவல்களை மறுப்பதற்காக அவர்கள் ஆல்ட் செய்தி நிறுவனத்தை இந்து எதிர்ப்பு நிறுவனம் என கூறி வருகின்றனர்.