பஞ்சாப் மாநி லத்தில் சட்டவிரோத மணல் கொள்ளை தொடா்பாக, அம்மாநில முதல்வா் சரண்ஜித் சிங் சன்னியின் மரு மகன் பூபேந்திர சிங் ஹனிக்குத் தொடா்புடைய இடங்களில் கடந்த வாரம் அமலாக்கத்துறை சோதனை நடத்தி யது. இதில், ரூ. 8 கோடி பணத்தை பறி முதல் செய்ததாகவும் கூறியது. இந்நிலை யில், பூபேந்திர சிங் ஹனி தற்போது கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது ஒன்றிய பாஜக அரசின் தேர்தல் நேரத்திய பழிவாங்கல் நடவடிக்கை என்று ஏற்கெனவே காங்கிரஸ் விமர்சித்துள்ளது குறிப்பிடத் தக்கது.