மனைவி மீது வன்முறை ஏவும் கணவன் தண்டிக்கப்பட வேண்டும்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை
மனைவி மீது வன்முறையை ஏவிடும் கணவர்கள் தண் டிக்கப்படக்கூடிய விதத் தில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரியுள்ளது. திருமணமானவர், பாலியல் வன்புணர்வு இழைக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டவர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தால் முழுமையாக விடுதலை செய்யப்பட்டிருப்பது தொடர்பாக அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப் பட்டிருப்பதாவது: சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் இந்தியத் தண்டனைச் சட்டம் 377 (இயற்கைக்கு மாறான வன் புணர்வு), 376 (வன்புணர்வு) மற்றும் 304 (மரணம் விளைவித்தல்) முத லான குற்றங்களைப் புரிந்து தண்ட னை பெற்றவருக்கு எதிராக நடை பெற்ற வழக்கில் அனைத்துக் குற்றங்களிலிருந்தும் குற்றஞ்சாட் டப்பட்டவரை குற்றவாளியில்லை என்று கூறி முழுமையாக விடுவித்தி ருக்கிறது (exonerated the accused). இந்தத் தீர்ப்பு மிகவும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
உறுதிப்படுத்தும் உடற்கூறாய்வு சான்றிதழ்
இந்த வழக்கில் பாதிப்புக்கு உள்ளான குற்றஞ்சாட்டப்பட்ட வரின் மனைவி, தன் விருப்பத் திற்கு விரோதமாக அவருடைய கையை தன்னுடைய மலவாயில் நுழைத்து பாலியல்ரீதியாகத் தன்னைத் துன்புறுத்தினார் என்று தெள்ளத்தெளிவாகக் கூறியி ருக்கிறார். இதனால் அவர் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பின்னர் ஒருசில நாட்களில் மருத் துவமனையில் இறந்துவிட்டார். இவருடைய உடற்கூறாய்வு சான்றி தழில், மலக்குடலில் இருந்த துளை களின் காரணமாகவே இவர் இறந் துள்ளார் என்று மிகவும் தெளி வாகக் கூறப்பட்டிருக்கிறது. நீதித்துறை நடுவர் முன் பாதிப்பு க்கு உள்ளான பெண்மணி அளித்த மரண வாக்குமூலத்திலும் அவரது கணவனின் கட்டாய வன்புணர்வு காரணமாக, உடல்நலம் பாதிக்கப் பட்டதாகக் கூறியிருக்கிறார். சம்ப வம் தொடர்பாக அவர் தன் அண்டை வீட்டாரிடமும், தன் நாத்தனாரிட மும் அடுத்த நாள் கூறியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து அவர் மருத் துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அங்கே அவர் இறந்துள்ளார்.
விசித்திரமான முறையில்...
அடுத்து, இந்தியத் தண்டனைச் சட்டம் 377ஆவது பிரிவை உச்ச நீதிமன்றம் இதுவரை ரத்து செய்ய வில்லை என்றபோதிலும், சத்தீஸ் கர் உயர்நீதிமன்றம் அதனைத் தவ றாகப் பயன்படுத்தி இருக்கிறது. புதிய சட்டத்தின்படி இது பொருந் தாது என்றும் விசித்திரமான முறை யில் அது கூறியிருக்கிறது.
கணவர் என்பதால் விலக்களிப்பது பாரபட்சம்
கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர் நீதி மன்றம் வழங்கிய இரண்டு முந்தைய தீர்ப்புகளில், கணவர் தனது மனைவியை கொடூரமாக நடத்திய வழக்குகளில் திருமண பாலியல் வன்கொடுமை விதி விலக்கு பொருந்தாது என்று கூறி யிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு நீதிமன்றங்களும், இந்தக் கொடூரமான பாலியல் குற்றங்க ளைச் செய்பவர் பாதிக்கப்பட்ட வரின் கணவரா இல்லையா என்பது முக்கியமல்ல என்று கருத்து தெரிவித்திருக்கின்றன. மேலும், பாலியல் வன்கொடுமை செய்த ஒரு ஆணுக்கு, அந்தப் பெண்ணின் கணவர் என்ற காரணத்திற்காக மட்டுமே விலக்கு அளிப்பது பார பட்சமானது என்றும் அவர்கள் கூறி யிருக்கின்றனர். உலகெங்கிலும் உள்ள பல நாடு கள் திருமண பாலியல் வன்கொ டுமை விதிவிலக்கை நீக்கியுள்ளன, அதில் இங்கிலாந்தும் அடங்கும். திருமணமான பெண் தனது கணவ ரின் சொத்தாகக் கருதப்பட்டதால், திருமண பாலியல் வன்கொடுமை விதிவிலக்கை நாம் பெற்றிருந் தோம். திருமண பாலியல் வன் கொடுமைக்கு விதிவிலக்கு அளித்திருப்பதை எதிர்த்து அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொ டுத்திருக்கிறது.
விலக்கின்றி தண்டிக்க வேண்டும்
இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, திரு மணமான பெண்கள் உட்பட, பெண் கள் சமத்துவ உரிமையையும், கண்ணியத்துடன் வாழும் உரிமை யையும் பெற்றுள்ளனர், அடிபணி தல் மற்றும் சமத்துவமற்ற அந் தஸ்தை நிலைநிறுத்தும் வன்முறை யிலிருந்து விடுபட்டுள்ளனர். குடும்ப வன்முறைச் சட்டம் பெண்களுக்கு சில உரிமைகளை வழங்குகிறது, இதில் குடும்ப வன் முறை வழக்குகளில் தனி குடி யிருப்பு உரிமையும் அடங்கும். எனவே, கணவர் மூலம் பாலியல் வன் ்புணர்வு மேற்கொள்ளப்பட்டாலும் விதிவிலக்கு அளிக்காது தண்டித் திட வேண்டும் என்றே அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக் கிறது.