பாகிஸ்தானின் மிகப்பெரிய மின்னுற்பத்தி நிறுவனமான ஹப் பவர் கம்பெனி என்பது, புல்வாமா தாக்குதல் நடந்த இரு மாதங்களில் ரூ.95 லட்சத்திற்குத் தேர்தல் பத்திரங்கள் வாங்கி யிருப்பதாகவும், அது பாஜக கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. ஹப் பவர் கம்பெனி என்ற பெயரில் பத்திரங்கள் வாங்கப்பட்டதும், அது பாஜகவுக்குச் சென்றதும் உண்மை. சரி, அந்த நிறுவனம்? நியூஸ்லாண்டரி தளம் அந்த நிறுவனத்தைத் தேடுகிற பணியைச் செய்திருக்கிறது. டெல்லி யின் கீதா காலனியில், ஹப் பவர் கம்பெனி என்ற பெயரில் ஒன்று இருப்பதாக கூகுள் தெரி விக்க, அங்கு சென்று தேடியிருக்கிறார்கள். அந்த முகவரியில் வணிக நிறுவனம் எதுவும் செயல்படவில்லை என்றும், ஒருவர் மட்டும் தங்கியிருந்ததாகவும் அண்டை வீட்டார் தெரி வித்திருக்கிறார்கள். அந்த நிறுவனத்திற்கு ரவி மெஹ்ரா என்ற பெயரில் ஜிஎஸ்டி கணக்கும் இருப்பதாக கூகுள் தெரிவித்தது. அந்தப் பகுதியில் நீண்ட காலமாகப் பால் விநியோகிப்ப வரைக் கேட்டபோது, அப்படி யாரையும் கேள் விப்பட்டதே இல்லை என்று சொல்லிவிட்டார். தில்லியின் ஜிஎஸ்டி துறையில் விசா ரித்தால், அந்த ஜிஎஸ்டி எண்ணுக்கான விண்ணப்பத்தில் ஆவணங்கள் எதுவும் இல்லை என்று பதிலளித்திருக்கிறார்கள். ஆதார், பான் எண் ஆகிய விபரங்கள் இன்றி ஜிஎஸ்டி கணக்குத் தொடங்க முடியாது என்பதுதான் பொதுவான நிலை. ஆக, ஹப் பவர் கம்பெனி என்ற பெயரில் ஒரு மாயாவி வந்து பாஜகவிற்கு நிதியளித்து விட்டு மாயமாய் மறைந்துவிட்டார்!