சில வாரங்களுக்கு முன்பே இம்மாநாட்டில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் தலைமையில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், மாநாட்டிற்கு சில நாட்களே உள்ள நிலையில் இந்தியாவின் பங்கேற்பு தவிர்க்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18 முதல் நடை பெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் அனைத்து நாடுகளின் அமைச்சர்களும் பங்கேற்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் வெளியுறவு அமைச்சரின் பயணம் தவிர்க்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. உண்மையில் அதிகாரப்பூர்வமாக பயணம் அறிவிக்கப் பட்டு, பின் ரத்து செய்யப்பட்டதன் பின்னணி என்ன ? இந்தி யாவின் ஜனநாயகத்தை அழிக்க நினைப்பதில் பாஜக காட்டும் ஆர்வத்தையும் தனது சுய லாபத்திற்காக தவிர்க் கப்படும் இந்த பயணம் தெற்குலக நாடுகளின் குரலை வலுப்படுத்துவதில் பின்னடைவு ஏற்படுத்துவதையும் காட்டு கிறது.
சர்வதேச வாக்குறுதி கேள்விக்குறியாகியுள்ளது
ஹவானா உச்சிமாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சரின் தலைமையில் உயர்மட்ட குழு பங்கேற்றி ருந்தால் உலகளாவிய தெற்கு நாடுகளின் ‘குரல்’ என்ற புது தில்லியின் கூற்றை மேலும் ஒரு படி முன்னோக்கி நகர்த்தியி ருக்கும், குறிப்பாக இந்தியா ஜி-20 மாநாட்டை நடத்திய ஒரு வாரத்திற்குள் கியூபாவில் அம்மாநாடு நடப்பதால் பல ஆக்கப்பூர்வ விளைவுகளை கொடுத்து இருக்கும். தற்போது இந்தியாவின் முடிவு தெற்குலக நாடுகளின் குரலை வலுப் படுத்துவோம் என்ற சர்வதேச வாக்குறுதியை கேள்விக்குறி யாகியுள்ளது.