ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் மூடப்படுவதாக அதன் நிறு வனர் நடே ஆண்டர்சன் தெரி வித்துள்ளார். இந்நிறுவனம் அதானி குழுமத்தின் ஊழல் மற்றும் பங்கு முறை கேட்டை உலகிற்கு அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதானி குழுமம் கார்ப்பரேட்டுகளுக் கான நிர்வாக விதிமுறைகளை மீறி, தனது பங்குகளை கையாளுவதற்காக முறைகேடுகள் செய்ததை ஹிண்டன் பர்க் நிறுவனம் கடந்த 2022 இல் வெளிக் கொண்டு வந்தது. இதுகுறித்து நடே ஆண்டர்சன் கூறு கையில், நாங்கள் மேற்கொண்டுவந்த பணிகள் நிறைவடைந்துவிட்டது. இந் நிலையில் எங்கள் நிறுவனத்தை கலைக்க முடிவு செய்துள்ளோம் என்றார். மேலும் அவர்களுடைய கடைசி ஆய்வான போன்ஸி வழக்கை முடித்து விட்டதாக வும், அதன் முடிவுகளை முறையாக அதற் குரிய அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளதாக வும் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் எங்கள் நிறுவனத் தின் பணிகள் இன்று முடிந்துள்ளது. இது தான் எங்கள் நிறுவனத்திற்கு கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த முடிவு நிறுவனத்தின் செயல் திட்டம் மற்றும் நோக்கத்தின் அடிப்படை யிலான முடிவு என கூறப்படுகின்றது. எந்த வெளிப்புற அழுத்தத்தின் காரணமாக வும் நாங்கள் நிறுவனத்தை மூடத் திட்ட மிடவில்லை எனவும், உடல்நலப் பாதிப்போ அல்லது தூண்டுதலின் காரணமாகவோ இம்முடிவிற்கு நாங்கள் செல்லவில்லை எனவும், இந்த அத்தியாயம் இயல்பாக அதன் முடிவுக்கு வந்துள்ளது எனவும் நடே ஆண்டர்சன் பேசியுள்ளார். ஆய்வு முடிவுகளை வெளியிடத் திட்டம் மேலும் மற்றவர்களையும் இது போன்ற ஆய்வுப்பணிகளை செய்யத் தூண்ட வேண்டும் என்பதற்காக இன்னும் ஆறு மாதத்தில் அந்நிறுவனம் மேற் கொண்ட ஆய்வு முறைகளை வெளியிடப் போவதாகவும், இதற்கான ஆவணங் கள் மற்றும் காணொலிகளை பொதுவெளி யில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த ஆய்வுப்பணிகளின் காரணமாக பெரும் பணக்காரர்கள் , நிறுவ னங்கள் என 100 தனிநபர்கள், ஒழுங்கு முறை அதிகாரிகளால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை சந்தித்துள்ளனர். இதனை குறிப்பிட்ட அவர் ‘நாங்கள் அசைத்துப் பார்க்க நினைத்த நிறுவனங் களை அசைத்துப் பார்த்தோம்’ என குறிப்பிட்டுள்ளார்.