https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
உலக அளவில் ‘ஸ்டார்ட்அப்’ எனும் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதில் வல்ல வர் என்றும், ஸ்டார்ட் அப் நாயகன் என்றும், இந்தியா வை இந்த துறையில் உலகிற்கே தலைமையேற்க செய்து விட்டார் என்றும் நரேந்திரமோடியை போற்றி புளகாங்கிதம் அடைந்தார்கள் அவரது ஊது குழல்கள். ஆனால் ஸ்டார்ட் அப் தொழில் நிறுவனங்கள் இப்போது, “டிரை அப்” (Dry Up) நிறுவனங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. அதாவது, லாபத்தை குவிப்பதற்காக பெரும் அளவிற்கு ஊழியர்களை வேலையைவிட்டு வெளியேற்றுகின்றன. அரசு இந்த நிறுவனங்களுக்கு நிதி அளிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் நடப்பு நிதியாண்டில், முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1100 கோடி டாலர் என்ப திலிருந்து 40 சதவீதம் வெட்டப்பட்டு வெறும் 60 கோடி டாலராக நிதி சுருக்கப்பட்டதன் விளைவாக மிகப் பெரும் அளவில் வேலை பறிப்பை இந்த நிறு வனங்கள் அமலாக்க துவங்கியுள்ளன என்ற அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகின்றன. இன்னும் சில மாதங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வேலை பறிக்கப்படுவார்கள். மோடி அவர்களே, பொருளாதாரத்தை அழிப்பதை நிறுத் துங்கள். வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்.