உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், மஜ்லிஸ் கட்சி ஒரு சதவிகித வாக்குகளைக் கூட பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது குறித்து, அக்கட்சியின் தலைவரும், ஹைதரா பாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். “உ.பி. தேர்த லில் கடுமையாக உழைத்த போதிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. உ.பி. மக்கள் பாஜக-விற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அவர்களின் முடிவிற்கு மதிப்பளிக்கிறேன்” என்று அவர் கூறியுள் ளார்.