states

img

பிடிவாதம் பிடிக்கும் பாஜக ; அதிருப்தியில் கூட்டணிக் கட்சிகள்

‘இரண்டுக்கு மேல் அமைச்சர் பதவி கொடுக்க முடியாது’ 

7 கட்டமாக நடைபெற்ற 18ஆவது மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவால் பெரும்பான்மை இழந்த பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக ளின் தயவோடு மீண்டும் ஆட்சி யில் அமர்ந்துள்ளது. ஞாயிறன்று மோடி மீண்டும் பிரதமராக பதவி யேற்ற நிலையில், அன்றைய தினமே பிரதமர் உட்பட 72 பேர்  ஒன்றிய அமைச்சர்களாக பதவி யேற்றனர். தொடர்ந்து திங்க ளன்று அமைச்சர்களின் இலா காக்கள் அறிவிக்கப்பட்டன.  72 பேரில் 30 பேருக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில், 30 பேரில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் 25 பேரும், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், லோக் ஜனசக்தி, ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா ஆகிய கட்சிக ளுக்கு தலா ஒரு கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது. தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி 5 பேருக்கு தரப்பட்டுள்ளது. இந்த 5இல் 3 பேர் பாஜகவைச் சேர்ந்த வர்கள். சிவசேனா (ஷிண்டே), ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகளை சேர்ந்த தலா ஒருவர். அதே போல 36 பேருக்கு இணை  அமைச்சர் பதவி ஒதுக்கப் பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக பாஜகவைச் சேர்ந்த 32 பேருக்கு மிக முக்கியமான துறைகளும், தெலுங்கு தேசம், குடியரசுக் கட்சி (அத்வாலே), ஐக்கிய ஜனதா தளம், அப்னா தளம் (அனுப்பிரியா - சோனியேலால்) ஆகிய 4 கட்சி களுக்கு தலா ஒரு சாதாரண துறையும் வழங்கப்பட்டுள்ளது. பரிதாப நிலையில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் தங்களது ஆதரவு பலத்தின் மூலமாகவே மோடி பிரதமராக பதவியேற்றதால் 16 எம்பிக்களை கொண்ட தெலுங்கு தேசம் மற்றும்  12 எம்பிக்களை கொண்ட ஐக்கிய  ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சி களும்  4 ஒன்றிய அமைச்சர் பதவி யும், மக்களவை சபாநாயகர் பதவியும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. ஆனால் இரு கட்சிகளுக்கும் பாஜக கொடுத்த தோ தலா ஒரு கேபினட் மற்றும் ஒரு இணை அமைச்சர் பதவி மட்டுமே. இதனால் பாஜக மீது தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா  தளம் கடும் அதிருப்தியில் உள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது

ஷிண்டே, அஜித் பவார் பிரிவுகள் காட்டம்

தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளை போல சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித்) கட்சிகளும் அமைச்சர் ஒதுக்கீடு விவகா ரத்தில் கடும் எதிர்ப்பை தெரிவித் துள்ளது. “நான் ஏற்கெனவே கேபினட் பொறுப்பில் இருந்த வன். அதனால் எனக்கு வழங்கப் படும் இணை அமைச்சர் பொறுப்பு வேண்டாம். இது எனக்கு அவ மரியாதையை ஏற்படுத்தும்” என தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் (அஜித்) கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல் கறாராக கூறிவிட்டார். “ஒன்று, இரண்டு எம்பி களை வைத்துள்ள கட்சிகளுக்கு கேபினட் பொறுப்பு, 7 எம்பிக் களை கொண்டுள்ள எங்களுக்கு இணையமைச்சர் பதவியா” என  சிவசேனா (ஷிண்டே)வும் பாஜக விற்கு எதிராக கிளம்பியுள்ளது. சபாநாயகர் ஒதுக்கீடுக்கு பிறகே பிரச்சனை கிளம்பும் ஒன்றிய அமைச்சர் ஒதுக்கீடு விவகாரத்தில் சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித்) கட்சிகள் மட்டும் போர்க்கொடி தூக்கியுள்ள நிலை யில், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அதிருப்தி யை வெளிக்காட்டாமல் உள்ளன. காரணம் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுக்கு சபாநா யகர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து வருகின்றன. சபா நாயகர் பதவியை பாஜக வழங்கா விட்டால் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் பிரச்ச னையை கிளப்பும் எனத் தெரி கிறது. எனினும் ஆந்திர மாநிலத் தைச் சேர்ந்த பாஜக எம்பி புரந்தேஸ்வரிக்கு சபா நாயகர் பொ றுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் ஒன்றும் வெளியாகி யுள்ளது. பாஜகவின் சபாநாய கர் அறிவிப்புக்கு பின்னரே மோடி ஆட்சியின் கேரண்டி என்ன வென்று தெரியும் என்பது குறிப்பி டத்தக்கது.