புதுதில்லி, டிச.1- 2022-ஆம் ஆண்டுக்கான இந்தி யாவின் ‘முதல் 100’ பணக்காரர்களின் பட்டியலை, போர்ப்ஸ் நிறுவனம் (Forbes Top 10 Richest Person India 2022) வெளியிட்டுள்ளது. அதில், ரூபாய் வீழ்ச்சி, டாலர் மதிப்பு உயர்வுக்கு இடையிலும் இந்திய பெரு முதலாளிகளின் மொத்த சொத்து மதிப்பு 65 லட்சம் கோடி ரூபாயாக அதி கரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாப்-100 பட்டியலில் இடம்பெற் றுள்ள 100 பணக்காரர்கள், இந்த ஆண் டில் மட்டும் 2 லட்சத்து 4 ஆயிரத்து 240 கோடி ரூபாய் (25 பில்லியன் டாலர்) வருவாய் ஈட்டியதையடுத்து, இவர் களின் மொத்த சொத்து மதிப்பு 65 லட்சத்து 35 ஆயிரத்து 640 கோடி ரூபா யாக (800 பில்லியன் டாலர்) உயர்ந் துள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ள தொழில திபர்களின் சொத்து மதிப்பு மட்டும் 31 லட்சத்து 46 ஆயிரத்து 393 கோடி ரூபாயாக உள்ளது. அதுமட்டுமல்லா மல் இந்தியப் பெரும்பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பில் சுமார் 30 சத விகிதம் அதானி மற்றும் அம்பானி ஆகி ய 2 பேரிடம் மட்டுமே உள்ளதாகவும் ‘போர்ப்ஸ்’ தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியப் பெரும்பணக்கா ரர்களின் பட்டியலில், அனைவரும் எதிர் பார்த்ததைப் போலவே, பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்ப ரும்- ஆர்எஸ்எஸ்-ஸின் செல்லப் பிள்ளையுமான கவுதம் அதானி முத லிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 2021 அக்டோபரில் முகேஷ் அம்பானி 102 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்தி லும், கவுதம் அதானி 71.7 பில்லியன் டாலர்களுடன் இரண்டாமிடத்திலும் இருந்த நிலையில், தற்போது ஒரே ஆண்டிற்குள் 12 லட்சத்து 11 ஆயிரத்து 460 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி முதலாமிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டில் முதலிடத்திலி ருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 7 லட்சத்து 10 ஆயிரத்து 723 கோடி சொத்து மதிப்புடன் 2-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ‘டி-மார்ட்’ நிறுவ னத்தின் தலைவர் ராதாகிஷன் தமானி ரூ. 2 லட்சத்து 22 ஆயிரத்து 908 கோடி சொத்து மதிப்புடன் 3-ஆவது இடத் திற்கு முன்னேறியுள்ளார்.
கொரோனாவிற்கான ‘கோவி ஷீல்டு’ தடுப்பூசியை தயாரித்து வழங் கிய பிரபல தடுப்பூசி நிறுவனமான ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’டின் தலைவர் சைரஸ் பூனாவாலா 1 லட்சத்து 73 ஆயி ரத்து 642 கோடி ரூபாய் சொத்து மதிப்பு டன் 4வது இடத்தைப் பிடித்துள் ளார். எச்.சி.எல். தலைவர் ஷிவ் நாடார் 1 லட்சத்து 72 ஆயிரத்து 834 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ஓ.பி.ஜிண்டால் குழுமத்தின் தலை வர் சாவித்ரி ஜிண்டால் 1 லட்சத்து 32 ஆயிரத்து 452 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 6-ஆவது இடத்தையும், சன் பார்மாசூட்டிகல்ஸ் தலைவர் திலீப் சாங்கி 1 லட்சத்து 25 ஆயிரத்து 184 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 7-ஆவது இடத்தையும், ஹிந்துஜா குழுமத்தின் ஹிந்துஜா சகோதரர்கள் 1 லட்சத்து 22 ஆயிரத்து 761 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 8-ஆவது இடத்தையும், ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் பிர்லா 1 லட்சத்து 21 ஆயிரத்து 146 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 9-ஆவது இடத்தையும், பஜாஜ் குழு மத்தின் பஜாஜ் குடும்பத்தினர் 1 லட்சத்து 17 ஆயிரத்து 915 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 10-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த ஆண்டின் ‘டாப் 100’ பட்டிய லில் 9 பேர் புதிதாக இணைந்துள்ள னர். வங்கி அதிகாரியாக இருந்து தொழிலதிபராக உருவெடுத்த ‘நைகா’ நிறுவனத்தின் தலைவர் பல்குனி நாயர், ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ரவி மோடி, ஷூ தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள ரபீக் மாலிக், மறைந்த தொழிலதிபர் ஜுன் ஜுன் வாலாவின் மனைவி ரேகா ஜுன் ஜுன் வாலா உள் ளிட்டோர் புதிதாக பட்டியலில் இணைந் துள்ளனர். டாப் 100 பணக்காரர்களில் இருந்து முன்பு வெளியேற்றப்பட்ட 4 பேரும், இந்த ஆண்டு மீண்டும் இந்த பட்டி யலில் இடம்பிடித்துள்ளனர். 17 ஆயி ரத்து 768 கோடி சொத்து மதிப்புடன் ஆனந்த் மகேந்திரா, பத்ரேஷ் ஷா, அனு அகா மற்றும் ஜோய் ஆலுக்காஸ் ஆகியோரே மீண்டும் பட்டியலில் இடம் பிடித்த நபர்கள் ஆவர்.