states

img

பாகிஸ்தானில் தொடர்ந்து நிகழும் விபத்துக்கள்

இஸ்லாமாபாத், மே 29- பாகிஸ்தானில் முறையாக சாலை விதிகளை பின் பற்றாததால்  பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில்  28 பயணிகள் பலியாகி யுள்ளனர்.  மேலும் 20 பேர் காயமடைந்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள் ளது. முழுமையான கார ணத்தை   கண்டறியும் விசாரணை நடைபெறுவதாக  அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.    பாகிஸ்தானில் சாலை விதிகளை சரியாக பின் பற்றாததாலும், போக்குவரத்துத் துறை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை  கடைப்பிடிக்காததாலும் சாலை விபத்துகள் அதிகம் நிகழ்ந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.  இவ்விபத்தை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்  தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும் துரித நடவடிக்கை எடுக்க  அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார்.