உருகுவே முன்னாள் ஜனாதிபதி ஜோஸ் முஜிகா காலமானார்
இடதுசாரி தலைவரும் உருகு வேயின் முன்னாள் ஜனாதி பதியுமான ஜோஸ் முஜிகா தனது 89 ஆவது வயதில் கால மானார். அவரது மரணச் செய்தியை உருகுவேயின் தற்போதைய ஜனா திபதி யமண்டு ஓர்சி உறுதிப் படுத்தினார். 1935-ஆம் ஆண்டு பிறந்த ஜோஸ் முஜிகா, 2010-இல் அந்நாட்டின் 40-ஆவது ஜனாதி பதியாக பதவியேற்றார். ஜனாதி பதியாக இருந்த போதும் மிகவும் எளிமையான வாழ்க்கையை கடைப்பிடித்தார். உலகின் மிக ஏழையான ஜனாதிபதி என அழைக் கப்பட்டார். அதே நேரத்தில் தன்னு டைய போர் குணமிக்க அரசியலா லும் தொழிலாளி வர்க்கப் பார்வை யாலும் உலகின் மிகச்சிறந்த தலைவராக பார்க்கப்பட்டார். உணவுக்குழாய் புற்றுநோய்க் கான சிகிச்சை பெற்றுவந்த அவர், தனது எளிமையான வீட்டில் மரணமடைந்தார். தனது பதின் பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்ட அவர் 1960-களில் கியூப புரட்சியால் ஈர்க்கப் பட்டு டுபமரோஸ் தேசிய விடு தலை இயக்கத்தில் சேர்ந்தார். தன்னை கொரில்லா வீரராக வளர்த்துக்கொண்டார். 1973-இல் அந்நாட்டில் நடந்த ஒரு ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து 12 ஆண்டுகள் உருகு வே ராணுவ சர்வாதிகாரத்திற்குள் வந்தது. அப்போது முஜிகா கைது செய்யப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இதில் பத்து ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஆட்சியில் அடிப்படை ஊதியம், குடும்ப வருமானம் உயர்வைக் கண்டது, வறுமை விகிதங்கள் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.