states

img

ஒரே நாளில் 14 காசுகள் அளவிற்கு சரிந்த ரூபாய் மதிப்பு!

புதுதில்லி, மார்ச் 24- அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு, புதன்கிழமை யன்று 14 காசுகள் அளவிற்கு சரிந்துள்ளது. மாதக் கடைசி என்பதால் இறக்குமதி யாளா்களிடையே டாலருக்கான தேவை அதிகரித்ததும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக சா்வதேச அளவில் ஏற் பட்டுள்ள நிச்சயமற்ற சூழலுமே ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் என்று வர்த்த கர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக, வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந் தையில் புதன்கிழமை வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 76.08 என்ற அளவில் வலுவடைந்த நிலையில் காணப்  பட்டது. எனினும், இந்த நிலை நெடு நேரம் நீடிக்கவில்லை. வா்த்தகத்தின் இடையில் ரூபாய் மதிப்பு எதிர்மறை எல்லைக்குள் நுழைந்தது.  இறுதியில் டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு 14 காசுகள் அளவிற்கு குறைந்து 76 ரூபாய் 32 காசுகளில் நிலை பெற்றது.  உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு கடந்த மார்ச் 7 அன்று, இதுவரை இல்லாத அளவாக 77 ரூபாய் 2 காசுகள் அளவிற்கு வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது. மார்ச் 11ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையி ருப்பு மதிப்பும், 9.64 பில்லியன் டாலர் அளவிற்கு சரிந்து 622.27 பில்லியன் டால ராக குறைந்தது என்பதுடன், இது கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அந்நியச் செலா வணி கையிருப்பு மதிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.