பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) 12 ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெறும் கும்ப மேளா நிகழ்வு ஜனவரி 13ஆம் தேதி துவங்கி, பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாட்கள் நடக்கிறது. இந்நிலையில், கும்பமேளா விழா வின் 7ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று சாஸ்திரி பாலத்தின் கீழ் உள்ள பந்தலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத னைப் பார்த்த பக்தர்கள் அங்கிருந்து உட னடியாக வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் கூடா ரத்தில் இருந்த வீட்டு உபயோகப் பொருட் கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. தக வல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தத் தீவிபத்து காரணமாக அலகா பாத் ஏ.டி.ஜி., பானு பாஸ்கர் கூறுகை யில், “கும்பமேளாவின் செக்டார் 19இல் 2 சிலிண்டர்கள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது பிற பகுதிகளுக்கும் பரவியது. தற்போது, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது. மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் எந் தக் காயமும் ஏற்படவில்லை” என்றார்.