states

img

வெற்றிக் களிப்புடன் வீடு திரும்பும் விவசாயிகள்

புதுதில்லி, டிச.11- கடந்த ஓராண்டாக விவசாயிகள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத் திற்கு பணிந்து மோடி அரசானது, விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, தில்லி மாநில எல்லை பகுதிகளை பல்வேறு மாநில விவ சாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய போராட்டம், ஓராண்டை கடந்தும் நீடித்தது. கோரிக்கைகளில் எந்தவித சமரசமின்றி விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு பணிந்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறு வதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் முறைப்படி சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. ஆனால் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வேண்டும். விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மின்சார திருத்தச் சட்டமுன்வடிவை வாபஸ் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி என்று விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த கோரிக்கை களையும் ஒன்றிய அரசு ஏற்றுக் கொண் டதால், போராட்டத்தை வாபஸ் பெறு வதாக விவசாயிகள் அறிவித்தனர்.

இந்தநிலையில் தில்லியை ஒட்டிய சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகிய எல்லைகளில் ஓராண்டுக்கு மேல் முகாமிட்டிருந்த விவசாயிகள் வீடு  திரும்புவதற்கான ஆயத்தப் பணி களில் ஈடுபட்டனர். தங்கள் கூடா ரங்களை அகற்றினர். ஒருவருக்கொ ருவர் உதவி செய்ய கூடாரங்களை பிரித்தனர். தார்ப்பாய், ஏணி, கம்பு கள், கயிறுகள், படுக்கை விரிப்புகள், கம்பி வேலிகள், கொசு வலைகள், பி.வி.சி. ஷீட்கள் ஆகியவற்றை வாக னங்களில் ஏற்றினர். பின்னர் வெற்றிக்களிப்புடன் ஆட்டம் பாட்டத்துடன் போராட்டக் களத்தில் இருந்து விவசாயிகள் வீடு திரும்பினர். இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த போராட்டமாகவும் உலக நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்த போராட்டமாகவும் விவ சாயிகளின் இந்த வீரஞ்செறிந்த போராட்டம் அமைந்தது.