பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தில் உள்ளது அலகாபாத் பல்கலைக்கழ கம். நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்க ளில் ஒன்றான அலகாபாத் பல்கலைக்கழ கத்தின் வணிகவியல் துறையில் நடப்பு கல்வியாண்டு முதல் கல்வி ஆண்டில் பக வத் கீதையில் கிருஷ்ணர் கூறியதாக கூறப் படும் போதனைகளை உள்ளடக்கிய ஐந் தாண்டு ஒருங்கிணைந்த பிபிஏ-எம்பிஏ படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, டாடா குழும தலைவர் ஜே.ஆர்.டி.டாடா, விப்ரோ குழுமத் தலை வர் அசிம் பிரேம்ஜி, ரிலையன்ஸ் குழுமத் கலைவரும், பிரதமர் மோடியின் நெருங் கிய நண்பருமான முகேஷ் அம்பானி, இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி, பார்தி எண்டர்பிரைசஸ் தலைவர் சுனில் மிட்டல் உள்ளிட்ட முன்னணி தொழில திபர்களின் ஸ்மார்ட் நிர்வாக முடிவுகள் குறித்தும் மாணவர்களுக்கு கற்பிக்கப் படும் என அலகாபாத் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. 26 மாணவர்கள் மட்டுமே கிருஷ்ணர் போதனை பட்டப்படிப்பை மிக பிரம்மாண்டமான முறையில் அறி முகம் செய்தது அலகாபாத் பல்கலைக் கழக நிர்வாகம். ஆனால் இதுவரை வெறும் 26 மாணவர்கள் மட்டுமே அந்த பட்டப் படிப்பில் சேர்ந்துள்ளனர். கிருஷ்ணர் போதனை படிப்பு மாணவர்கள் இடையே ஆர்வமில்லாமல் இருப்பதால் இந்த படிப்பில் மாணவர்கள் படிப்பை விட்டு வெளியேறும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், முதலாமாண்டில் வெளி யேறினால் ஒரு வருட சான்றிதழும், இரண்டாம் ஆண்டில் டிப்ளமோ சான்றித மும், மூன்றாம் ஆண்டில் வணிக நிர்வா கத்தில் பிபிஏ (இளங்கலை) பட்டமும், ஐந்தாம் ஆண்டில் எம்பிஏ (முதுகலை) பட்டமும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு சமாளித்துள்ளது அலகா பாத் பல்கலைக்கழகம்.