states

img

பாரத் பெட்ரோலியத்தையும் தனியார்மயமாக்கும் மோடி அரசு!

புதுதில்லி, மே 19- பொதுத்துறை நிறுவன மான பிபிசிஎல் (BPCL)  எனப்படும், ‘பாரத் பெட்ரோ லியம் கார்ப்பரேஷன் லிமி டெட்’ (Bharat Petroleum Corporation Limited) நிறு வனத்தின் பங்குகளை முழு மையாக விற்பதற்கு, ஒன்றிய அரசு முன்பு திட்டமிட்டது. அடிமாட்டு விலைக்கு கிடைப்பதாக இருந்தால் மட்டுமே வாங்குவோம் என்று பெருமுதலாளிகள் உறுதி யாக இருந்ததால், தற்போ தைக்கு 25 சதவிகித பங்கு களை மட்டும் விற்பதென முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமை யிலான ஒன்றிய அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சொத்துகளை தனியார்மயமாக்குதல், நீண்ட காலக் குத்தகைக்கு விடுதல் என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது.  

அண்மையில் மாபெரும் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் 3.5 சதவிகிதப் பங்குகளை ரூ. 21 ஆயிரம் கோடிக்கு தனியாருக்கு விற்பனை செய்தது. முன்ன தாக எல்ஐசி பங்குகள் விற்பனை மூலம் 70 ஆயிரம் கோடி கிடைக்கும் என ஒன்றிய அரசு கணக்குப் போட்டிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. எல்ஐசி ஐபிஓ கிட்டத்தட்ட தோல்வி என்று அறிவிக்கும் நிலையில் தான் தற்போது உள்ளது. பங்குச் சந்தைகளிலும் எல்ஐசி-யின் பங்குகளுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்க வில்லை. இதனிடையேதான் பாரத் பெட்ரோலியம் நிறு வனத்தைத் தனியார்மய மாக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்திய சில்லரை எரிபொருள் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் பாரத் பெட்ரோலியம் நிறு வனத்தைத் தனியாருக்கு விற் பனை செய்வது மூலம் அதிகப்படியான நிதியும்  கிடைக்கும், இந்நிறு வனத்தை வாங்க இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங் கள் மத்தியில் அதிகப்படி யான போட்டி இருக்கும் என  ஒன்றிய அரசு முன்பு கணித்தி ருந்தது.  

ஆனால் பாரத் பெட் ரோலியம் நிறுவனத்தின் பங்குகளுக்கு 3 நிறு வனங்கள் மட்டுமே விண்ணப் பம் கொடுத்தன. அதிலும்  வங்கி நிதி உத்தரவாதத்தைப் பெற முடியவில்லை என்று 2 நிறுவனங்கள் ஆரம்ப நிலையிலேயே விலகி விட்டன. இறுதியில் அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம் மட்டுமே களத்தில் இருந்தது. இவ்வாறு ஒரு  விண்ணப்பதாரர் மட்டுமே இருந்த காரணத்தால் பிபிசி எல் நிறுவனத்தை முழுமை யாக தனியார்மயமாக்கும் திட்டத்தை மோடி அரசு கைவிட்டது. அதற்குப் பதிலாக, பிபிசிஎல் நிறுவனத்தின் 25 சதவிகிதப் பங்குகளை மட்டும் தனியாருக்கு விற்கும் திட்டத்திற்குத் தாவியுள்ளது. இதற்கான வேலைகள் நடந்து வருவதாக, பெட் ரோலியத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரி வித்துள்ளார்.