states

ரூ.100 கோடி ஒதுக்கி 3030 கட்டடங்களை அகற்ற முடிவு

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு  தகவல்

மதுரை, செப்.22 - தமிழகத்தில் 5583 பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்து பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளன என்றும் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு 3030 சேதமடைந்த பள்ளிக் கட்டடங்கள் அகற்றப்பட உள்ளன என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.   மதுரையை சேர்ந்த  செந்தில் முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழ கத்தில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வரு கின்றன. இதில், பெரும்பாலான பள்ளிகளில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டிடங்கள் அதிக மாக உள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக பல பள்ளிகூடங்களின் மேற் கூரை மற்றும் கட்டடங்கள் மிகவும்  மோசமாக  இடிந்து விழும் நிலை யில் உள்ளது. மேலும் மதுரை, கோவை, திருநெல்வேலி, சென்னை உட்பட பல்வேறு  மாவட்டங்களில் பள்ளிக்கட்டடங் களின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளன.  ஆனால், உயிரி ழப்புகள் இல்லை. குறிப்பாக மதுரை கொடிமங்கலத்தில் உள்ள  அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம்  மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே, தமிழகத்தில் உள்ள  அரசு பள்ளிகள், அங்கன்வாடி  கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து அதில்  ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை அகற்றி புதிய கட்டி டம் கட்ட  கமிட்டி அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.” என்று கோரியிருந்தார்.

எனவே, தமிழகத்தில் உள்ள  அரசு பள்ளிகள், அங்கன்வாடி  கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து அதில்  ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை அகற்றி புதிய கட்டி டம் கட்ட  கமிட்டி அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.” என்று கோரியிருந்தார்.  இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணா பிரசாத் அமர்வு முன்பு வியாழனன்று  நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ,தமிழகத்தில் 5583  பள்ளிக்கட்டடங்கள் சேதம டைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 2021-2022  ஆண்டும் தமிழகத்தில் 2553 சேத மடைந்த பள்ளிக்கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. 2022 -2023 இல் ரூ.100 கோடி ஒதுக்கப் பட்டு 3030 சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் அகற்றப்பட உள்ளன. ரூ.3745.28 கோடி நபார்டு கடன்  திட்டத்தின் மூலம் 6941 பள்ளி களுக்கு 40043 வகுப்பறைகள், 3146 அறிவியல் ஆய்வகங்கள், 10470 கழிப்பறைகள், 5421 குடிநீர்  வசதிகள், 828387 மீட்டர் சுற்றுச் சுவர் ஆகியவை செயல்படுத்தப் பட்டுள்ளது. ரூ.106.78  கோடி செலவில் 2695 பள்ளிகளில் 32 வகுப் பறைகள், 2 ஆய்வகங்கள், 436  கழிவறைகள், 2270 பள்ளி களுக்கு குடிநீர் வசதிகள் செய்யப் பட்டு வருகிறது என்று தெரி விக்கப்பட்டிருந்தது. இதனை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.