மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்
பாஜக ஆளும் உ.பி.,யில் கொடூரம்
வன்முறை கூடாரமாக மாறி வரும் பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் மண்ட பத்தில் திருமண விழா நடத்திய தற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப் பட்ட அடாவடி சம்ப வம் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிர தேசத்தின் ரஸ்ரா வில் உள்ளது சுயம்வர் திருமண மண்ட பம். அப்பகுதியில் இதுதான் சற்று பெரிய திருமண மண்டபம் என்ற நிலையில், சுயம்வர் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை அன்று தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருமண விழா நடத்தி யுள்ளனர். இந்நிலையில், வெள்ளிகிழமை அன்று இரவு 10:30 மணியளவில் மல்லா டோலி பகுதியைச் சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்ட சாதிவெறி குண்டர்கள் திரு மண மண்டபத்திற்குள் நுழைந்து,”தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான நீங்கள் எப்படி இந்த மண்டபத்தில் திருமணத்தை நடத்தலாம்?” என கேள்வி எழுப்பியும், சாதியைச் சொல்லி ஆபாசமாக பேசி யும், திருமணத்தை நடத்திய தலித் குடும்பத்தினர் மீது கம்பி, மரக்கட்டை களை வைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அஜய் குமார், மனன் காந்த் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தலித் குடும்பத்தினர் அளித்த புகா ரின் பேரில் 20 பேர் மீது ரஸ்ரா பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய் துள்ளதாகவும், ஆனால் இன்னும் ஒருவர் கூட கைது செய்யவில்லை என செய்தி கள் வெளியாகியுள்ளன.