மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹாத் எம்ஐடிசி (மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சி கழகம்) பகுதியில் ப்ளூ ஜெட் ஹெல்த்கேர் நிறுவன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வெள்ளியன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், தொழிற்சாலையில் இருந்த சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. இந்த சம்பவத்தில் 4 தொழிலா ளர்கள் உடல் கருகி பலியாகினர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பலரின் நிலை கவலைக் கிடமாக உள்ளதாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.