states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

கனமழைக்கு 26 பேர் பலி

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த  3 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சிக்கிம், மிசோரம், அசாம், மணிப்பூர், திரிபுரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம்  ஆகிய மாநிலங்களில் நிலைமை மோச மாக உள்ளது. அங்கு சாலைகள் அடித்துச்  செல்லப்பட்டு, வீடுகள் தரைமட்டமாகி யுள்ளன. இதனால் பலரும் தங்களது வீடுகளை இழந்து தெருவில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், வடகிழக்கு மாநி லங்கள் முழுவதும் கனமழைக்கு 26  பேர் பலியாகியுள்ளனர். அசாம், அரு ணாச்சலப்பிரதேசத்தில் அதிகளவு உயி ரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழலில்  வடகிழக்கு மாநிலங்களில் வரும் நாட்க ளில் கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை  ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்குவங்கத்தில் வெறுப்பு பிரச்சராத்தை தொடங்கினார் அமித் ஷா

மேற்குவங்க மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் வெறுப்பு பிரச்சராத்தை தொடங்கியுள்ளார். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசு கையில்,”இந்திய ஆயுதப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கர வாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் மம்தா பானர்ஜி ‘ஆபரேசன் சிந்தூர்’ நட வடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரி வித்து வருகிறார். அவர் இந்தியாவில் உள்ள பல்வேறு தாய்மார்கள் மற்றும்  பெண்களின் உணர்வுகளை அவ மதித்துள்ளார். நீங்கள் இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை எதிர்க்க வில்லை. கோடிக்கணக்கான தாய்மார்  கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கை யுடன் விளையாடியுள்ளீர்கள். மேற்கு வங்க பெண்கள், வரவிருக்கும் தேர்தல்  களில், ஆபரேஷன் சிந்தூரை எதிர்ப்ப வர்களுக்கு, செந்தூரத்தின் மதிப்பை விளக்க வேண்டும். பயங்கரவாதிகளின் மரணம் மம்தாவுக்கு மிகவும் வருத் தத்தை அளித்தது. முஸ்லிம்கள் வாக்கு  வங்கியைப் பெறுவதற்காகவே மம்தா பானர்ஜி ஆபரேசன் சிந்தூருக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்” என அவர் பேசியுள்ளார்.

சமாஜ்வாதி எம்.பி., பிரியாவை கரம்பிடிக்கிறார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், சமாஜ்வாதி கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜை திருமணம் செய்து கொள்ள  உள்ளார். இருவருக்கும் ஜூன் 8ஆம் தேதி  உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக பிரியா சரோஜின் தந்தை தூபானி சரோஜ்  ஞாயிறன்று அறிவித்தார். மேலும் நவம்பர் 18ஆம் தேதி வாரணாசியில் உள்ள ஹோட்டல் தாஜில் திருமண நிகழ்வுகள் நடைபெறும் என்றும் தக வல் வெளியாகியுள்ளது. 27 வயதான ரிங்கு சிங் கடந்த இரண்டு  ஆண்டுகளாக இந்திய தேசிய அணியின்  ஒருநாள் மற்றும் டி-20 பிரிவுகளில் விளை யாடி வருகிறார். அதே போல ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காகவும் விளையாடி வருகிறார். அதே போல 26 வயதான பிரியா சரோஜ் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்த லில் ஜான்பூரின் மச்லிஷஹர் தொகுதி யிலிருந்து முதல் முறையாக எம்.பி. யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.