states

img

பாஜக ஆளும் திரிபுராவில் சட்டம் -ஒழுங்கு மோசமாக உள்ளது

அகர்தலா “பாஜக ஆளும் திரிபுராவில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தி ற்குப் பின் அகர்தலாவில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,”வட திரிபுராவின் கடம் தலா மற்றும் பேகுசெர்ராவில் நடந்த வகுப்புவாத சம்பவங்கள் மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. முக்கியமான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப பாஜக அரசு மேற்கொள்ளும் முயற்சியே இந்த வகுப்புவாத சம்பவங்கள் ஆகும். அகர்தலாவின் மத்தியப் பகுதியில் நடந்த இரட்டைக் கொலைகள் மற்றும் காவல்துறையின் சித்ரவதையால் ஒரு பழங்குடி இளைஞர் உயிரிழந்த சம்பவம் ஆகியவை திரிபுராவில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை காட்டுகிறது. வெற்று உரைகள் மாநிலத்தின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் சூழலில், முதல்வர் மாணிக் சாஹா, காவல்துறை  தலைமை இயக்குநர் அமிதாப் ரஞ்சன் ஆகிய இருவரும் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளதாக வெற்று உரைகளை அடிக்கடி பேசி வருகின்றனர். நகர மையத்திலேயே குற்றவாளிகள் துணிந்து மக்களைத் தாக்கும் அள வுக்கும், காவல்துறையின் சித்ரவதை யால் ஒரு பழங்குடி இளைஞர் உயிரி ழக்கும் அளவுக்கும் நிலைமை மோசமா கியுள்ளது. பாஜக அரசு காவல்துறை யின் கைகளைக் கட்டிப்போட்டுள்ளது. குற்றச் சம்பவங்களை மூடிமறைக்க ஆளும் கட்சியின் செல்வாக்கின் கீழ் காவல்துறையின் ஒரு பிரிவு செயல்படு கிறது. இது முழு காவல்துறை நிர்வா கத்தின் நற்பெயரையும் களங்கப் படுத்தியுள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் கல்வி முதல் அனைத்து துறைகள் வரை அரசில் பரவலாக ஊழல் நடை பெறுகிறது.  எம்பிபி பல்கலைக்கழ கத்தில் ஆட்சேர்ப்பில் துணைவேந்தர் யுஜிசி வழிகாட்டுதல்களை மீறி ஊழல் செய்கிறார். முக்கியமாக திரிபுராவை போதை வழித்தடமாக மாற்றி மாநில இளைஞர்களை பாஜக சீரழிக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மோசமடைந்து வரும் நிலைமைகளுக்கு எதிராக திரி புராவில் இடதுசாரி கட்சிகள் தொடர் போ ராட்டங்களை நடத்த உள்ளன” என அவர் கூறியுள்ளார்.