உற்சாகத்துடன் தொடங்கியது சிபிஎம் மகாராஷ்டிரா மாநில மாநாடு
மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மகாராஷ்டிரா மாநில மாநாடு பிப்ரவரி 27ஆம் தேதி பர்பானி மாவட்டத்தின் செலு என்ற இடத்தில் தொடங்கியது. மூத்த தலைவர்கள் நரசய்யா ஆதம், உதயன் சர்மா, தத்தா மானே மற்றும் சிவகொண்டா கோட்டு ஆகியோர் கட்சி கொடி யை ஏற்றி வைத்தனர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத் (ஒருங்கிணைப்பாளர்), நிலோத்பால் பாசு, டாக்டர்.அசோக் தாவ்லே மற்றும் பிரதிநிதி கள் தியாகிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். இதனுடன் சோலாப்பூரைச் சேர்ந்த கலைக் குழுவான பிரஜா நாட்டிய மண்டல் புரட்சிகரப் பாடல்களையும் பாடியது. இந்நிகழ்வின் போது பர்பானி மாவட்டச் செயலாளர் உத்தவ் பவுல் மாநிலத்தில் நடந்த புரட்சிகரப் போராட்ட வர லாற்றைக் குறிப்பிட்டார். அவரது உரையில் செலு, பர்பானி மற்றும் மராத்வாடா பிராந்தியத்தில் நடந்த புரட்சிகர இடது இயக்கங்க ளின் வரலாறு இடம்பெற்றன. பேராசிரியர் யு.ஆர்.தோம்பல் வர வேற்புரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பிரகாஷ் காரத் தனது தொடக்க உரையுடன் மாநாட்டை துவங்கி வைத்தார்.
தொடக்க உரையில் அவர் அமெரிக்க ஜனாதிபதி டொ னால்டு டிரம்ப் மூலம் சர்வதேச அளவில் தீவிர வலதுசாரி ஏகாதி பத்திய சக்திகள் எழுச்சியடைவ தைப் பற்றி விரிவாக கூறினார். மேலும் ஏகாதிபத்திய சக்திகளின் செல்வாக்கு உலகளவில் எவ் வாறு பிரதிபலிக்கிறது, அது இந்தியாவை எவ்வாறு பாதிக்கி றது, இனப்படுகொலைப் போர் கள், வலதுசாரி சக்திகளின் ஒருங்கிணைப்பு குறித்தும் அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில் ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த் தல், லத்தீன் அமெரிக்கா மற்றும் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இடதுசாரி சக்திக ளின் வெற்றி குறித்தும் பிரகாஷ் காரத் விரிவாக உரையாற்றினார். ஆர்எஸ்எஸ் - பாஜகவை தோற்கடிப்போம் மோடியின் தலைமையிலான ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சியின் நவ-பாசிச, மதவாத, சாதிவாத மற்றும் பெருநிறுவன ஆதரவு கொண்ட தன்மையை பிரகாஷ் காரத் கடுமையாக விமர்சித் தார். தொடர்ந்து இந்தியாவில் சிபிஎம் நடத்திய போராட்டங்க ளை விரிவாக விளக்கி, போ ராட்டங்களை மேலும் அதிகரிக்க அழைப்பு விடுத்தார். இறுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் இடதுசாரி சக்திகளும் தங்கள் பலத்தை பன்மடங்கு அதிக ரித்துக் கொள்ள வேண்டும் என்றும், ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டணியை எதிர்கொள்ள மதச் சார்பற்ற சக்திகளுடன் ஒன்றி ணைய வேண்டும் என்றும் பிர காஷ் காரத் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து மாநிலச் செயலா ளர் டாக்டர் உதய் நர்கர் உரை யுடன் முதல் நாள் அமர்வு நிறைவு பெற்றது. டாக்டர் உதய் நர்கர் தனது உரையில், “கம்யூ னிஸ்டுகள் முன்மொழியும் சுதந்திரம் மனித சுதந்திரமாகும். காசாவில் இருந்து பர்பானி வரை சிபிஎம் போராட்டம் நீண்டு ள்ளது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே, பீட்டில் உள்ள மசாஜோக் பகு தியின் தலைவர் (சர்பாஞ்ச்) சந்தோஷ் தேஷ்முக் மற்றும் பர்பா னியில் போலீஸ் காவலில் இறந்த சோம்நாத் சூர்யவன்ஷி ஆகி யோரின் கொலைகள் மிக மோச மானது” என அவர் கூறினார். ஹைதராபாத்தில் நிஜாமுக்கு எதிராக ஆயுதப் படைகளில் போராடியவர்களுக்கும், அம் பேத்கர் பல்கலைக்கழகத்தின் பெயரை மராத்வாடா பல்கலைக் கழகம் என்று மாற்றக் கோரிய போராட்டத்தில் உயிர் இழந்த வர்களுக்கும் டாக்டர் உதய் நர்கர் வீரவணக்கம் செலுத்தி னார். மாநாட்டின் முதல் நாள் அமர்வின் நிறைவில் வரவேற்புக் குழு செயல் தலைவர் ராம கிருஷ்ணா ஷெர் நன்றியுரை ஆற்றினார்.