கன்வார் யாத்திரை தொடர்பான பாஜக அரசின் உத்தரவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவரும், ஒன்றிய அமைச்சருமான சிராக் பஸ்வான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சிராக் பஸ்வான் கூறுகையில்,”கன்வார் யாத்திரை தொடர்பான உத்தரவு காவல்துறையின் அறிவுரையாக இருந்தாலும் சாதி, மதத்தின் பெயரால் பிளவுகளை உருவாக்கும் எதையும் நான் ஆதரிக்கமாட்டேன். கன்வார் யாத்திரை தொடர்பான உத்தரவு மூலம் இரண்டு வகுப்பு மக்களிடையே இடைவெளி ஏற்பட வாய்ப்புள்ளது. இது கண்டனத்துக்குரியது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், உயர்சாதியினர் மற்றும் முஸ்லிம்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ள டக்கிய ஏழைகளுக்காகப் பணியாற்று வது ஒவ்வொரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். நமக்குத் தேவையானது அனைத்து தரப்பு மக்களுக்காக நாம் வேலை செய்ய வேண்டும்” என கூறி உத்தரப்பிரதேச பாஜக அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சிராக் பஸ்வானின் பீகார் பாஜக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.