states

img

ஹைதராபாத்தை ‘பாக்யா நகர்’ ஆக்கிய ஆர்எஸ்எஸ்

ஹைதராபாத், டிச.23- 2014-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையி லான ஒன்றிய பாஜக அரசும், மாநில பாஜக அரசுகளும் இஸ்லாமியர் அடையாளங்களை அழிக்கும் வகை யில், திட்டமிட்டு நகரங்களின் பெயர் களை மாற்றி வருகின்றன.  கடந்த 7 ஆண்டுகளில் உ.பி.யிலுள்ள அலகாபாத் ‘பிரயாக் ராஜ்’ ஆனது. பைசாபாத் ‘அயோத்தியா’ ஆனது. ரயில் நிலையத்திற்கு இருந்த முகல்சராய் என்ற பெயர், ‘தீன தயாள் உபாத்தியாயா’ ஆனது. அதற்கு முன்பே, மகாராஷ்டிர பாஜக ஆட்சி யின் போது தலைநகர் பம்பாய், மும்பை எனவும், ஹரியானாவின் குர்கான் என்ற நகரத்தின் பெயர் குரு கிராம் எனவும் மாற்றப்பட்டது.

 இந்த வரிசையில் தெலுங்கானா மாநிலத் தலைநகரான ஹைதரா பாத்தின் பெயரையும் ‘பாக்யா நகர்’ என மாற்ற வேண்டும் என்று 2018 முதல் ஆர்எஸ்எஸ் வலியுறுத்தி வரு கிறது. தற்போது ஹைதராபாத் என்ற பெயரை குறிப்பிடாமல் தனது அறிக் கையில் பாக்யா நகர் என்றே ஆர்எஸ்எஸ் குறிப்பிடத் துவங்கியுள்ளது. தனது சுற்றறிக்கை ஒன்றில், “ஆர்எஸ்எஸ் கூட்டமைப்புக்களின் ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 5 முதல் 7 வரை தெலுங்கானா தலை நகர் பாக்யா நகரில் நடைபெற உள் ளது” என்று குறிப்பிட்டு, ஹைதரா பாத் என்ற பெயரை ஆர்எஸ்எஸ் நீக்கி யுள்ளது.