states

பணியிலிருந்து நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க பரிசீலனை

புதுதில்லி,பிப்.7- பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க ஊரக வளர்ச்சித்துறையின் முன்மொழிவை பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் 13 ஆயிரத்து 500  பேர் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது பணியில் இருந்து நீக்கப் பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் , அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கு மாறு 2014 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீட்டு மனுவை  தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்சநீதி மன்றம் , சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தர வுக்கு இடைக்கால தடை விதித்தது.  இதற்கிடையில் கொரோனா பேரிடர் காலத்தில் தங்களுக்கும் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜனவரி 6 அன்று விசார ணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில், “பணி  நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணி யாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவு  எடுக்கவுள்ளது. அதற்கான ஆலோசனை களின் விவரங்கள் இன்னும் வழக்கறிஞர் களுக்கு தெரிவிக்கப்படாததால் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று வழக்கை 4 வாரங்களுக்கு  ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 7 திங்களன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசு சார்பில் “மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு செய்து முன்மொழிவை அனுப்பி உள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் அந்த  முன்மொழிவை பரிசீலனை செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கும். அந்த பரிசீலனை செய்யப்பட, இந்த வழக்கை மேலும் 4 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று கோரப்பட்டது.