பெங்களூரு கர்நாடகாவில் காலி யாக இருந்த ஷிவ் கான், சன்னப்பட் டனா, சந்தூர் ஆகிய 3 தொகு திகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நவம்பர் 13 அன்று நடைபெற்றது. இந்த 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக் கிழமை நடைபெற்றது. பாஜக மூத்த தலைவ ரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஷிவ்கான் தொகுதி காலி யானது. பாஜகவின் கோட் டையான இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பதான் (1,00,756 வாக்குகள்) 13,448 வாக்குகள் வித்தியா சத்தில் பசவராஜ் பொம்மை யின் மகன் பாரத் பொம்மை யை (87,308 வாக்குகள்) வீழ்த்தினார். ஒன்றிய அமைச்சர் மகன் படுதோல்வி அதே போல மதச்சார் பற்ற ஜனதாதள (ஜேடிஎஸ்) தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி மக்களவைக்கு தேர்ந்தெடுக் கப்பட்டதன் மூலம் சன்னப் பட்டனா தொகுதி காலியா னது. பாஜக - ஜேடிஎஸ் சார் பில் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி சன்னப்பட்டனா வில் போட்டியிட்டார். இத்த கைய சூழலில் அவரை எதி ர்த்து போட்டியிட்ட காங்கி ரஸ் கட்சியின் யோகீஸ்வரா (1,12,642 வாக்குகள்) 25,413 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். 87,229 வாக்குகள் மட்டுமே பெற்று நிகில் குமாரசாமி படுதோல்வியைச் சந்தித் தார். ஷிவ்கான், சன்னப்பட் டனா ஆகிய இரண்டு தொகு திகள் முன்னாள் முதல்வர் களின் தொகுதி மட்டுமின்றி பாஜக (ஷிவ்கான்), ஜேடிஎஸ் (சன்னப்பட்டனா) கட்சிகளின் கோட்டையாக இருந்தது. ஆனால் இரண்டு தொகுதிகளையும் காங்கி ரஸ் கட்சி எளிதாக கைப்பற்றி யது. மேலும் சந்தூர் சட்டமன்ற தொகுதியில் 9,649 வாக்கு கள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஹனுமந்தாவை (83,967 வாக்குகள்) வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் அன்ன பூர்ணா (93,616) வெற்றி பெற்றார். இதன்மூலம் கர் நாடகாவில் இடைத்தேர் தலை எதிர்கொண்ட 3 தொகுதிகளையும் காங்கி ரஸ் கட்சி கைப்பற்றியது.